சனி, 27 ஜூலை, 2013

இறைவன் கொடுத்த வரம்

அழுதால்தான் அன்னையும்  அறிவாள் 
                          குழந்தையின் பசியை!
ஆயிரம் மைல்கள் அப்பாலிருந்தும் - வார்த்தைகளின்றி 
              உள்ளக்குறிப்பறியும் உண்மை நட்பு!

தாயில் சிறந்த தெய்வமில்லை உலகில்!
ஆனால் தாய்க்கு நிகரான 
               தங்க உறவுகள் - நண்பர்கள்!

நன்றிக்கு அர்த்தமில்லை 
                நட்பின் அகராதியில்!
அதனால் கவிவரியில் நன்றியுரைத்தேன் 
               வரமாய் நண்பர்களைத் தந்த 
                                  இறைவனுக்கு!
                                      
                              -- தல்லிதாசன்


அன்பு நண்பர்கள் அருண் மற்றும் ஆனந்துக்கு சிறப்பு அர்ப்பணம்.