செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

இரவுகள்

இரவுக்கும் பகலுக்கும்
இடைபட்ட தூரத்தை!
கனவுகளில் கடக்க விரும்புகிறேன்!
ஆனால்! அது!
கண்ணீரில் கரைகிறது!

                              -- தல்லிதாசன் 

இமைகளின் உறக்கம்

விலகாத இமைகள்!
விழிகளுக்குத்தான் பாரம்!
கனத்துப் போன இதயங்களுக்கு!
அவை!
இதமான இரும்புத் திரைகள்!

                          -- தல்லிதாசன்  

என் தேடல்கள்

முடியாத பயணங்களைத்
தொடராத விடியலைத்
தேடுகிறேன் நான்!

அந்த விடியல் பொழுதில்!
நிறம்மாறா நீலக் கடலைத்!
தேடுகிறேன் நான்!

அந்தக் கடலின் கரையோரம்!
பதியாத பாதச் சுவடுகளைத்
தேடுகிறேன் நான்!

அந்தப் பாதச் சுவடுகளின்
தடம் போகும் பாதையைத்
தேடுகிறேன் நான்!

அந்தப் பாதையில் தொடங்கிய
பயணத்தின் முடிவினைத்
தேடுகிறேன் நான்!

ஆம்!

முடியாத பயணங்களைத்
தொடராத விடியலைத்
தேடுகிறேன் நான்!

                            -- தல்லிதாசன்


பனிமழை

சிதறிடும் பனிமேகம்! அதை
விதைத்திடும் குளிர்காலம்!
பூமி மேலே புதிதாய் ஒரு வானம்!
கேணி போலே பொறை தீர்க்கும் தாகம்!


                                -- தல்லிதாசன்

குறிப்பு:
பொறை - உலகம்    

முகமூடி

காத்தப் போலக்
கரையும் நெஞ்சில்!
வார்த்த இல்ல! என் 
வலியச் சொல்ல!

இதழ்கள் பூக்க!
இதயம் வெடிக்கும்!
உலகின் மேடை! அதில்
உயர்வாய் நடிக்க!

                           -- தல்லிதாசன்




ஆசை

இந்த உடலைத் துறந்த உயிரோடு
உலகில் வாழ ஆசை!
                          -- தல்லிதாசன்

பாட்டு

புல்லுக் கட்டத் தூக்கிக்கிட்டு!
துள்ளி நானும் போகையிலே!
ஒத்தையடிப் பாதையில உன்னைக் கண்டேனே!
ஓரக்கண்ணில் உன்னப் பாத்து ஏங்கி நின்னேனே!

மல்லு வேட்டி கட்டிக்கிட்டு!
முள்ளு மீசை வச்சிக்கிட்டு!
ஒத்த பீடி பத்தவைக்க போற மச்சானே!
இந்த 
ஒத்த ரோசா ஏங்கிநிக்குது பாரு மச்சானே!



                                    -- தல்லிதாசன்