மாற்றம் என்னும் மாறிலியின்
மகிமையறியா மழலை நான்!
கொட்டும் மழையின் கீதத்தை
நித்தம்தேடும் குழந்தை நான்!
வருடம்முழுதும் வாடாத வாசமலர்
வேண்டும் அப்பாவி நான்!
கிடைத்தது கடலாய் இருக்க!
அண்டம்கொள்ள ஆசை கொண்டேன்!
ஆகாயம் என்னும் மாயத்திரையை
மனதில் மாட்டிக் கொண்டு!
- தல்லிதாசன்