புதன், 16 ஜனவரி, 2013

ஒரு ஊமையின் கண்ணீர்


மாற்றம் என்னும் மாறிலியின்
       மகிமையறியா மழலை நான்!
கொட்டும் மழையின் கீதத்தை
       நித்தம்தேடும் குழந்தை நான்!
வருடம்முழுதும் வாடாத வாசமலர்
      வேண்டும் அப்பாவி நான்!
கிடைத்தது கடலாய் இருக்க!
       அண்டம்கொள்ள ஆசை கொண்டேன்!
ஆகாயம் என்னும் மாயத்திரையை
        மனதில் மாட்டிக் கொண்டு!

                                       - தல்லிதாசன்






சனி, 5 ஜனவரி, 2013

முக்கோணக் காதல்

கற்பனைக் காற்றினில் காகிதமாய்
                               நான் பறந்து!
விண்ணைத் தொட்டு
                       பிரதியெடுத்தேன்!
வெண்ணிலாவின் பால்முகத்தை!

வண்ணங்கள் சங்கமித்த
          முத்துப்பேழையில் மூடிவைத்தேன்!
அந்த அழகோவியத்தை!

இந்த ஆடவனின் கைத்தொட
பூத்துநின்ற முழுமதியவள்
          நாணித்தான் போனாள்!
மூன்றாம் பிறையாக!
கொண்டவன் நெற்றியில்
                திலகமாய் வீற்றிருக்க!

இதையறியாத ஆதவன்!
கீழ்த்திசையில் கண் விழித்து!
மேல்திசை நோக்கி தெடுகிறான்
இந்த அழகு தேவதையை!

                                 - தல்லிதாசன்