ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

முகமூடி மனிதர்கள்

சுட்டெரிக்கும் சூரியன்
தரும்கானல் நீர்தான்! - இந்த
முகமூடி மனிதர்களின்
உதட்டோர சிரிப்பும்!

உதட்டுச் சிரிப்பில்
உள்ளம் நெகிழாதே!
மெய்பொய் எதுவென
ஆராய தவறாதே!

மூடியில்லா மனமாயினும்
முழுதாய் நம்பாதே!
மூடிபோட்ட முகமாயின்
துளியும் நம்பாதே!

                   -- தல்லிதாசன்

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நான் வேண்டும் வரங்கள்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உழலுகின்ற வாழ்வை
யெல்லாம் வென்றுவிடும் நெஞ்சம் வேண்டும்!

காமமென்றும் காதலென்றும் காலம் வரையும்
கோலங்களை கண்டுவிடா விழிகள் வேண்டும்!

உறவென்றும் பிரிவென்றும் உலகம் காட்டும்
மாயைகளை நம்பிவிடா தெளிவு வேண்டும்!

மெய்யென்றும் பொய்யென்றும் பகுத்தறிய
காட்சிகளை நம்பாத நல்அறிவு வேண்டும்!

கனவென்றும் நிஜமென்றும் பேதமில்லாமல்
கனவினை நனவாக்கும் நெஞ்சுறுதி வேண்டும்!

இவையெல்லாம் கிடைத்த பின்பு போதுமென
திருப்தி கொள்ளும் உள்ளம் வேண்டும்!

                        -- தல்லிதாசன்

சனி, 5 செப்டம்பர், 2015

ஏன் இந்த மழைத்துளி?


தருவின் வேர்களில உற்சாகங்கண்ட பூமிப்பெண்
ஏறிட்டுப் பார்த்தாள் ஆவல் மேலிட!

அங்கே வர்ணமாலை சூடிநின்ற வானமகன்
கார்மேகங் கொண்டு மறைத்தான் ஆதவனை!

ஆகாயத்தின் ஆளுமை கண்டு
நாணம் கொண்டாள்  நிலமகள்!
அந்நாணத்தை கலவரமாக்கியது மண்ணை
நோக்கிய அந்த மழைத்துளி!

கார்மேகங் கொண்ட காதலில்
தன்னிலை மறந்து விழுகிறதா? அல்லது
அதனோடு கொண்ட ஊடலால்
கோபங் கொண்டு இறங்குகிறதா?

ஆழ்கடலின் அளவைக் கண்டு
அடைக்கலம் கொள்ள வருகிறதா? அல்லது
தவமிருக்கும் சிப்பியில் கருவுற்று
முத்தாய் பிறக்க வருகிறதா?

மொட்டவிழ்த்து பூத்துநின்ற ரோஜாவில்
தன்இதழ் பதிக்க வருகிறதா? அல்லது
அதற்கு காவல் நிற்கும்
முட்களிடம் காயம்பட வருகிறதா?

சாமரம் வீசும் மயிலின்
அழகைக் காண வருகிறதா? அல்லது
வண்ணத் தோகையில் படர்ந்து
தன்னைத் துறக்க வருகிறதா?

பட்டினத்தார் கொண்ட வாட்டத்தைப்
போக்க வாஞ்சையோடு வருகிறதா? அல்லது
கலங்கி நிற்கும் உழவனின்
கண்ணீரை மறைக்க வருகிறதா?

குழம்பிய காரிகையின் களையிழந்த
கன்னத்தில் முத்தமிட்டு சொன்னது மழைத்துளி!
உன்னில் வண்ணங்கூட்ட வானமகன்
அனுப்பிய மாலையில் ஓர்மலரென்று!!!

                         - தல்லிதாசன்

உன்னதத் தவம்

என் உடல்தேடும் உயிரும் நீயல்லவா!
உன் உயிர்மூடும் உறையும் நானல்லவா!

உடலோடு உடல்சேர்த்து உறவாடவா?!
உண்ணாமல் உறங்காமல் உயிர்தேய்கிறேன்?!

இல்லை அன்பே!

உள்ளங்கள் ஒன்றாகும் உவகை கொண்டு!
உலகை உனக்கு உயில் எழுத!
உன்னதத் தவம் செய்கிறேன்!

                   -- தல்லிதாசன்

குமுறல்கள்

வெட்டி வீ்ழ்த்த மரங்கள்
இல்லையென்றா
மனிதத் தலைகள் கேட்கிறாய்!

கூடிவாழ்ந்த குலத்தினை
குள்ளநரிகள் வேட்டையாடவா
மதிமறந்து சூழ்ச்சியை ஏற்றாய்!

உயிரில்லாத சுவரின்
சித்திரம் பெற்ற மரியாதையை
உயிருள்ள மனிதருக்கு மறுத்தாய்!

மறந்து போனாயே மனிதா
நம்மை படைத்தது இயற்கையென்று!

கடவுள் என்றாய்!
மதம் என்றாய்!
சாதி என்றாய்!
குலம் என்றாய்!
இன்று கூனிக்குறுகி நிற்கிறாய்!
குட்டுப்பட்டதை அறியாமல்!

ஊரை எரித்து தேர்வலம்!
சடலங்கள் மீது ஊர்வலம்!
இவற்றையா கேட்கிறான் உன்கடவுள்!

அவன்கேட்பது உள்ளத்தின் அன்பு!
அதுபுரியாமல் ஆடுகிறாய் ஆணவத்தில்!

கல்லை கடவுளாய்க்
கும்பிடும் வீணர்களே!
சாதி பேதமின்றி
மனிதரை மதியுங்கள் மனிதர்களாக!

மனதில் அமைதி கிட்டும்!
அந்த அமைதியில்
ஆண்டவணைக் காணலாம்!

                          -- தல்லிதாசன்

வாழ்க்கை:::

உன் வாயுதிர்க்கும் வார்த்தைகள்

வீணாய்க் கரையும் கற்பூரமாய்
காற்றோடு கரைந்திடுமா?

எழுத்துக்களின் கோர்வையாய்
ஏட்டோடு நின்றிடுமா? - அல்லது

கருத்துக்களின் மூலமாய், ஆழமாய்
வரலாற்றில் வாழ்ந்திடுமா?

என்பதைத் தீர்மானிக்கும்
கருவிதான் வாழ்க்கை!

                  -- தல்லிதாசன்

பிறப்பிற்கு இறப்பா? அல்லது இறப்பிற்கு இறப்பா?:::

அமைதி தொலைத்து
ஆடம்பரம் தேடி
இரக்கம் இழந்து
ஈகை மறந்து
உணர்வுகள் அடக்கி
ஊருக்கு ஊனம்தந்து
எட்டெடுத்து வைத்து
ஏற்றம் காணாமல்
ஐம்புலன்களை அடக்காமல்
ஒழுக்கம் மறந்து
ஓயாமல் உழலும்

வீணணாய் வாழ்ந்து!
மண்ணோடு மாள்வதற்கு!
மானிடப் பிறப்பெதற்கு?

அறிவை ஆயுதமாக்கி
ஆர்ப்பரித் தெழுந்து
இருளை அகற்ற
ஈரடியில் தடம்பதித்து
உணர்ச்சிகள் குவித்து
ஊறிணை அழித்து
ஐயங்கள் தௌிந்து
ஒற்றுமையோடு வாழ
ஓங்கும் நம்புகழ்

என்று!
வீரமாய் மார்தட்டி
விவேகத்தோடு வழி அமைத்து!
இவ்வுலகை வெல்கையில்!
வரலாற்றில் இறந்துபோகும்
நம் இறப்பு!

                    -- தல்லிதாசன்

சருகாகிப் போனேன்:::

கிளையோடு இணைந்து
வண்ணமலர்களை பிரசவித்து!

காற்றோடு கொஞ்சிமகிழ
ஆசையாய் துளிர்த்த இலையொன்று!

நிறைவேறாத கனவுகளோடு
சருகாய்மாறி காத்திருக்கிறது!

தன்னை விரும்பாத கிளையின்
மகிழ்ச்சிக்கு உரமாக!

                 -- தல்லிதாசன்

தருவாயா இழப்பீடு

கனவுகளைக் களவாடினாய்!
உறக்கத்தைத் திருடினாய்!

நினைவுகளில் நிறைந்தாய்!
வார்த்தைகளை வசப்படுத்தினாய்!

இப்படி சின்னசின்னதாய்
இழந்து நின்றேன் ஏராளம்!
இதயம் இழந்த நாள்முதல்!

இழப்பதற்கு ஏதுமில்லை
உயிரைத் தவிர!

என் உயிரையும் ஆட்கொண்டு
எனை உனதாக்கு!

இல்லையேல்!
இழப்பிற்கு ஈடாக!
காற்றோடு கரைந்து போகும்
வரம்கொடு எனக்கு!

                   --  தல்லிதாசன்

யார் நீ


வேதனைகள் சுமக்க பிறந்தவனா நீ!
அல்ல அல்ல!

சாதனைகள் படைக்க பிறந்தவன் நீ!
இந்தப் புவியாளப் பிறந்தவன் நீ!
புதுவிதி எழுதப் பிறந்தவன் நீ!

உன் கண்ணீருக்கு விடைகொடு!
உன் கண்களுக்கு ஒளிகொடு!

உனக்காகக் காத்திருக்கும் காலத்திற்கு! - வரலாற்றில்
உன்பெயரை எழுதும் வரம்கொடு!

                 -- தல்லிதாசன்

தயாராய் இரு

சாதிகளை வேரறுக்க வந்தவன் நீ!
ஏற்றத்தாழ்வுகளை எட்டிஉதைக்க வந்தவன் நீ!
கல்லாமையை களையெடுக்க வந்தவன் நீ!
இல்லாமையை இல்லாமலாக்க வந்தவன் நீ!
அரசியலை அழகாக்க வந்தவன் நீ!
உரிமைக்கு குரல்கொடுக்க வந்தவன் நீ!
மூடத்தனத்திற்கு முடிவுகட்ட வந்தவன் நீ!
உண்மையை உணர்த்த வந்தவன் நீ!

இவை உன்கடமைகள் அல்ல!
நீபிறந்த மண்ணின் பெருமை காக்க
உணர வேண்டிய முதன் மொழிகள்!

உணர வேண்டிய!
உணர்த்த வேண்டிய!
உண்மைகள் ஏராளம் உண்டு!

பொறுத்தது போதும் தோழனே!
பொங்கி வா!
யுத்தம் ஒன்று காத்திருக்கிறது!

ஆம்!
 
மெய்யுக்கும் பொய்யுக்குமான யுத்தம்!
வீணர்களை விலக்கி வைக்கும் யுத்தம்!
வளர்ச்சியை முன்னெடுக்கும் யுத்தம்!

யுத்தத்தின் முடிவில்
துளிர்க்கும் ஒருபுது தேசம்!
நமக்கென நம்தேசம்!
தமிழ்தேசம்!

                   -- தல்லிதாசன்

ஐயம் தீர்ப்பாயா???

விழியின் ஒளியில்
மொழிபேசும் வித்தை அறிந்தேன்!

ஏனோ ஓர்ஐயம் எனக்கு!

இது காதலா?
இதுதான் காதலா?
இதுவும் காதலா? - என்று!

ஐயம் தீர்ப்பாயா?

வேலை யிழந்த இதழ்களில்
இதமாய் ஓர் முத்தமிட்டு!

                   -- தல்லிதாசன்

அற்புத பரிசு

கார்முகில் கூடுகையில் சந்தித்தோம்!
கூடலை எதிர்பாராமல்!

வாழ்க்கைக் கனவுகளை
வார்த்தைகளில் பரிமாறினோம்!
வானவில்லின் வண்ணம் பார்த்து!

மறந்து போனோம்
கடந்துபோன நாட்களை!
முகிலின் முத்தத்தால்
முகம்மாறிய நிலமகளின்
நாணம் பார்த்து!

அருவியாய் பொழியும் மழைபோல்
அன்பைப் பொழிந்தோம்!
உன்அன்பு மழையில்
நான் நனைந்து!

ஆனந்தக் கண்ணீரை
உதிர்க்கையிலே!
காரணம் நீயென்றறிந்து
பரிசைத் தந்தாய்
என்கண்களில் கண்ணீரை விரும்பாமல்!

நீபொழிந்த அன்புமழையில்
அழகாய் வளர்ந்த
நினைவு களென்னும் விருட்சம்
இன்று தூறலை சிந்த!

இனிமையாய் அனுபவிக்கிறேன்!
நீதந்த தனிமை
என்னும் பரிசை!
                       --தல்லிதாசன்

அடைந்து விட்டோமா? அடகு வைத்தோமா?

விண்ணை முட்டிய கோஷங்கள்!
அகிலம் அதிர்ந்த ஆர்ப்பாட்டங்கள்!
ஆண்டுக் கணக்காய் சிறைவாசங்கள்!
மண்ணில் குளமான செங்குருதிகள்!
மரணத்தைத் தழுவிய வீரர்கள்!

அறியாமையால் இழந்த சுதந்திர விருட்சத்தை
மீண்டும்காண நம்மண்ணில் புதைந்த விதைகளிவை!

விதைகள் முளைத்ததா என்ற
அச்சம் எனக்கு! - ஆம்!

மும்மாரி பொழிந்து
முப்போகம் விளைந்த வயல்வௌிகள்!

வெற்றிச்செய்தியை மார்புத்
தழும்புகளாய் பொறித்திடும் வீரம்!

முல்லைக் கொடிக்கும்
பரிவுகாட்டிய இரக்க குணம்!

பசுவின் புகாருக்கும் செவிசாய்த்து
நியாயம் வழங்கிய நீதி!

அடிமைச் சிறைக்குள் அகப்படுமுன்
அழியாத செல்வங்களாய் நாம்கொண்டவை!

அதிகாரம் இழக்கையில் அன்பளிப்பாய் இழந்தவை!

இவற்றைப் பெற்றுக் கொண்டல்லவா
நாம்சொல்ல வேண்டும்!
சுதந்திரம் அடைந்தோம் என்று!

மாறாக!

அன்றிருந்த அதேபிரிவினை!
சாதி மதங்களாய்!

அன்றிருந்த அதேபகை!
மாநிலங்கள் வடிவில்!

அன்றிருந்த அதேசூழ்ச்சி
அரசியல் அரங்கத்தில்!

இன்னும் அடையவில்லை நாம்
அதிகாரத்தை!

ஆங்கிலேயனிடம் மீட்டிய சுதந்திரத்தை
அன்னியனிடம் அடகு வைத்தோம்!
மீண்டோம்என்ற பிரமையில் உள்ளோம்!

சேரர் சோழர் பாண்டியரென
மூவேந்தர்கள் கூட வேண்டாம்!
காமராஜரைப் போல்!
கக்கனைப் போல்!
கலாமைப் போல்!
எம்மண்ணின் மைந்தன்
எமைஆளும் காலம்தான்
எமக்கு சுதந்திரம்!

                          -- தல்லிதாசன்

சிறைபிடிப்பேன்

தனியாய் நான் வருகையில்
கடமைக்கு கரைதொடும்  அலைகள்!
இன்று உன்னோடு வருகையில்
மழலைபோல் துள்ளிக் குதிக்கின்றன!

அலைகளின் துள்ளலுக்கு காரணம்
உன்னைக் கண்ட உற்சாகமா?
அல்லது
உன்னைக் காணவந்த
நிலவைக் கண்ட பூரிப்பா?

காரணம் கேட்டேன் அலைகளிடம்!

பேச முடியாமல் வெட்கப்பட்டு
நுரைகளால் விடையை எழுதியது கரையில்!

அதை நான் படிக்குமுன்
தென்றல் அதை எடுத்துசென்றது!

தென்றலை சிறைபிடித்து விடையறிவேன்!

நிலவென்று விடை இருந்தால்!
உன்பாதங்களில் பணிந்து
காலமெல்லாம் உன்னிடம்
மன்னிப்பு கோர!
அந்த அலைகளை சிறைபிடிப்பேன்!

                -- தல்லிதாசன்

அக்கப்பஞ்சர் மருத்துவர்

மழையோடு பயணித்த
ரயில் பயணம் முடிந்து!
நடைமேடையில் நடை போடுகையில்!

மனமெல்லாம் உற்சாகம்!
உடலெங்கும் புத்துணர்ச்சி!

இருந்தும் ஓர்குழப்பம் எனக்கு!
ரயில் பயணத்தில் எதிர்காற்று
எடுத்து வந்த மழைத்துளிகள் 
அக்கப்பஞ்சர் மருத்துவம் பயின்றது 
எங்கே என்ற குழப்பம்!
                       -- தல்லிதாசன்

குடிமகன்கள் கவனத்திற்கு:::

மதுகுடிக்க செல்லும் மடையர்களே!
சற்றே நில்லுங்கள்!

பகைவனைத் தேடி செல்வதேனோ?
உங்கள் பகுத்தறிவை மறந்து!

ஆம்! - மது

உன் உயிருக்குப் பகைவன்!
உன்பெற்றோரின் நிம்மதிக்குப் பகைவன்!
உன்மனைவியின் கனவுகளுக்குப் பகைவன்!
உன்பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பகைவன்!
இச்சமூகத்தின் அமைதிக்குப் பகைவன்!

கிடைப்பதால் குடிக்கிறேன் என்று
பொய்க் காரணம் கூறாதே!

துணிக் கடைகளைக்  கண்டு
தாய்க்கு சேலைவாங்க தோன்றியதுண்டா தினமும்!

கண்கவரும் நகைக் கடைகள் ஆயிரமுண்டு!
உன்மனைவிக்கு ஒரு மூக்குத்தியேனும் தேடியதுண்டோ!

தரமான பள்ளிகள் தாராளமாய் உள்ளன!
அவற்றில் உன்பிள்ளைகளுக்கு இடம் தேடியதுண்டா?

வாய்ப்புகள் ஆயிரம் உண்டு!
வாழ்வதற்கும்! சாவதற்கும்!

தொழில் வளர்ச்சியைப் புறந்தள்ளி!
வியாபாரி யாகிவிட்ட
அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
நாம் வாங்கிக்கொண்ட சாபம்!

வியாபாரத்தை விரிவாக்குவதை
அவர்கள் கடமையாய்க் கருதலாம்!

உன் கடமை என்ன?

சற்றே சிந்தித்துப் பார்!
பகுத்தறிவைப் பாரமாய் நினைத்து
பாதாளத்திற்கு வழி தேடாதே!

                           -- தல்லிதாசன்

உருகிவிட்டேன்

முழுநிலவை சாட்சியாய் வைத்து
முல்லைச்செடி பிரசவித்த
முத்துக்களைக் கண்டேன் - திருஷ்டிப் பொட்டோடு!
ஒளிவீசும் உன் விழிகளில்!

குளிரும் உன் கண்கள்!
எனக்குள் உஷ்ணம் கூட்ட!
உருகி விட்டேன் திவலைகளாய்!

அத்திவலைகளில் ஒருதுளியை
உன்இமை முடியில் ஒருநொடி
இட்டுவிடு போதும்!
சொர்க்கத்தின் வாசலை
தொட்டுவிட்ட இன்பம் பெறுவேன்!

                           -- தல்லிதாசன்

கவிதை:

என்னை நான் தொலைத்துவிட்டேன்!

நம்மைப் பற்றிய கனவுகளிலா!
உம்மைப் பற்றிய நினைவுகளிலா!

விவரம் ஏதும் அறியாததால்!
உம்இதயத்தில் தேடுகிறேன் என்னை!

                       -- தல்லிதாசன்

வரலாற்று நாயகனுக்கு அர்ப்பணம்

பிறக்கையில் பெற்றோருக்கு முத்தானீர்
இறக்கையில் தேசத்தின் சொத்தானீர்!

புத்தகத்தில் படித்ததுண்டு
வரலாற்றில் வாழ்பவர்களின்
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை!

ஆனால் இன்று!!!
உலகமே காண்கிறது!
வரலாற்று நாயகனின்
இறுதிச் சடங்கினை!
கண்ணீரை சாட்சியாய் வைத்து!

சாதி மதத்தால் 
பிரிந்து நிற்கும் தேசத்திலும்!
இமயம் முதல் குமரிவரை
கண்ணீர் சிந்தாத கண்களில்லை!

உம்பிரிவை எண்ணி கணமேனும்
மனங்கனக்காத மனிதரில்லை உலகில்!

எண்ணி எண்ணி வியக்கிறோம்!
நீர் சொன்ன வார்த்தைகளை!

உம் சிந்தனைகளுக்கு
வடிவம் கொடுத்து!
நீர்கண்ட கனவையும்
எங்கள் லட்சியமாக்கி!
அஞ்சலி செலுத்துவோம்!
அழியாப் புகழடைந்த உமக்கு!!!

                    -- தல்லிதாசன்

மரணத்திற்கு மரணம்

கனவுகள் காணச் சொன்னீர்!
எங்கள் உறக்கம் கலைந்தது!
உற்சாகம் பிறந்தது!

அக்னிச் சிறகுகள் தந்தாய்
தகர்க்க முடியாத தடைகளை
சாம்பலாய் பொசுக்கி விட!

ஏழ்மையைவென்று ஏற்றம் கண்டீர்!
எம்மைப் போன்றோருக்கு
எடுத்துக் காட்டாய் நின்றீர்!

நீசுமந்த நாளிதழ்!
உன்படத்தை  சுமக்க ஏங்கின!

விருதுகளெல்லாம் விருது பெற்றன!
உம்கைகளில் தவழும் போது!

பதவிகள் பெருமை கொண்டன
நீர்அவற்றை அலங்கரித்த போது!

அணு விஞ்ஞானி!
அற்புத பேராசிரியர்!
நாட்டின் முதல் குடிமகன்!

அனைத்தையும் தாண்டி
அன்பான மனிதராய்
எங்கள் மனதில் நின்றுவிட்டீர்!

நிச்சயம் மரணத்திற்கு
மரணம்தான்  உம்விசயத்தில்!

                      -- தல்லிதாசன்

எண்ணச் சிதறல்கள்

கடலில் விழுந்த மழைத்துளியின்
முத்துச் சிதறல்கள் கூட
கடலை நீங்கிச் செல்வதில்லை!

உன்நினைவுகளில் சங்கமித்த
என்எண்ணச் சிதறல்கள் போல!
                -- தல்லிதாசன்

உனைக் கரம்பிடிக்கும் வரம்கிடைத்தால்

உன் நெற்றியில் முத்தமிட்டு 
எழுப்புவேன்!
நீ எழும்ப மறுத்தால்
என் இதழ்களால் உன்
விழிகளைத் திறப்பேன்!

எழுந்து நின்று நீ
சோம்பல் முறிக்கையில்
பின்னிருந்து உன்னைக் கட்டியணைத்து
பின்னங் கழுத்தில் முத்தமிட்டு
சொல்வேன் காலை வணக்கம்!

நான் குளிக்கையில்
உன்னையும் அழுக்காக்கி
இரவுக் கோலத்தின்
மிச்சத்தை முடிப்பேன்!

சின்னச் சின்ன சில்மிஷங்களோடு
வார இறுதிகளில் சிற்றுண்டி!

டென்ஷனான வேலையில்
நீமூழ்கி எழுகையில்
மொக்கை ஜோக்சொல்லி
உன்னை சிரிக்க வைப்பேன்!

மாலை வேளையில்
நீண்ட சாலையில்
உன்கரம் பிடித்து
கணக்குப் பாடம் படிப்பேன்!

கணக்குகள் தவறாகும் போது
உன்தோளில் சாய்ந்து
மெல்லிய புன்னகையில்
ஆறுதல் தேடுவேன்!

பௌர்ணமி நாளில்
உன்னை என் மடியிலிட்டு
நிலவோடு நீபேசும் அழகை ரசிப்பேன்!

உன்இதயம் பாடும் தாலாட்டைக்
கேட்டுக் கொண்டே உறங்கிடுவேன்!

இப்படி சின்னச்சின்ன
ஆசைகள் ஏக்கங்கள் ஏராளம்!

கனவுக் கோட்டையில்!
காதலை ரசித்தேன்!
காதல் கோட்டையில்!
கனவுகளை ருசிக்க காத்திருக்கிறேன்!

அனுமதி கொடுப்பாயா
ஆலயப் பிரவேசத்திற்கு!!!

                  -- தல்லிதாசன்

உறக்கம் தொலைத்தேன்

அதைத் தேடுகையில்
உன்முகவரி கிடைத்தது!

முகவரி அடைந்ததும் இதயத்
துடிப்பின் ஓசை மாறியது!

ஓசையைக் கேட்டேன் - அது
காதல் என்றது!

காதலுக்கு அர்த்தம்
தேடினேன் அகராதிகளில்
அவை உன்பெயரைக் காட்டின!

உள்ளப் பூரிப்பை முகத்தில்காண
ஆவலாய்ப் பார்த்தேன் கண்ணாடியை!

அப்போதுதான் புரிந்தது
உன்முகவரியில் என்னைத்
தொலைத்துவிட்ட உண்மை!

                    -- தல்லிதாசன்

என்காதலை சொல்ல எத்தனித்தேன்

கற்பனைகள் ஏதுமின்றி
கவிநடைகள் ஏதுமின்றி
இயல்பாய் சொல்ல
எத்தனித்தேன் என்காதலை!

வாரத்தைகள் ஏதுமின்றி
இதழ்கள் மௌனமாகின!
கனவுகள் சுமக்கும் விழிகளோ
கண்ணீரை விடையாக்கின!

ஆம்!

வார்த்தைகளில் அடங்காத என்காதலை
காவியமாய்ப் படைத்திட
பேனா மையாகும் ஆவலில்
வந்த ஆனந்தக் கண்ணீர்!

                    -- தல்லிதாசன்

பரிவுகாட்டு பனித்துளிக்கு:::

பச்சைப் புல்வௌியில்
படர்ந்திருக்கும் பனித்துளிகளை
பகலவன் பருகையிலே!

ஒற்றைத் துளியில்
உன்முகம் பார்த்து
ரசித்து நின்றான்
தன்தாகம் மறந்து!

நீஅருகில் இருந்தால்
முடிவதில்லை அதன் ஆயுட்காலம்!
நீவிலகிச் சென்றாலோ!
அது வாழாது ஒருநொடி காலமும்!

                 -- தல்லிதாசன்

முதல் சந்திப்பு

கம்பீரமாய் நிற்கும்
காதல் சின்னமாம் - தாஜ்மகாலின்!
அடிக்கல்லை வருடிய
இன்பம் பிறக்குதடி!

இயல்பாய் நடந்த நம்
முதல் சந்திப்பை
இன்று நினைக்கையில்!

                -- தல்லிதாசன்

காதலின் ஆழத்தை உணர்ந்தேன்

நீ கொஞ்சி பேசும்
இன்ப மொழிகளில்
உன் காதலின் ஆழம் உணர்ந்தேன்!

நீ மெலிதாய் உதிர்க்கும்
வன்சொல்லில்
புழுவாய்த் துடிக்கும் உயிரின்
வேதனையில் உணர்ந்தேன்
என் காதலின் ஆழத்தை!

             --  தல்லிதாசன்

காயங்கள் இல்லை ஆனால் கண்ணீருண்டு

நிலவின் நிழலாய் மாற
ஏங்கித் தவித்த குருவிக்கு!

அந்நிலவின் நினைவுகளே நிழலானது!
பௌர்ணமி நாளில் மட்டுமல்ல!
அமாவாசை இரவிலும் கூட!
         -- தல்லிதாசன்

நல்ல நண்பன்

எண்ணங்கள் வடிவம் பெற்று
வார்த்தைகளை வடிக்கும் முன்பே!

மனதின் மொழியை விழியில்
அறியும் நட்பு கிடைத்தால்
நிலவின் மறுபக்கம் காணலாம்!

அந்த நண்பன் நீயென்றால்!
காண முடியும் என்னால்
ஆகாயத்தின் மறுபக்கத்தை!

                   -- தல்லிதாசன்

கண்ணீர்த்துளியா? வியர்வைத்துளியா?


வியர்வையும் கண்ணீரும்
இயல்பில் ஒத்த இருதுளிகள்!
அவற்றின் வேற்றுமைகள் அறிவாயோ?

கண்ணீர், துன்பத்தின் வௌிப்பாடு!
வியர்வை இன்பத்திற்கான முதலீடு!

காலத்தின் ஓட்டத்தில்
காற்றோடு கரைந்து போவது கண்ணீர்!
காலத்தால் அழியாத 
சரித்திரம் படைப்பது வியர்வை!

உனக்கு மட்டுமல்ல உன்நிழலுக்கும்
துன்பம் தருவது கண்ணீர்!
உனக்கும் நீவாழும் நிலத்துக்கும்
புன்னகை சேர்ப்பது வியர்வை!

கலக்கம் ஏன் தோழனே!
உன்துன்பம் போக்கும் மருந்து
கண்ணீரல்ல!
இன்பத்தின் வாசலைத் தட்டுகின்ற
வியர்வைத்துளி!!!

               -- தல்லிதாசன்

கோயிலில் குரங்குகள்

எம்மக்கள் கட்டிய கோயிலில்
ஆண்டவனைக் காணச் சென்றேன்!

வாயிலை மறித்து நின்றது
வாரணாசிக் குரங்கு ஒன்று!

காரணம் கேட்டேன்!
கோயில் தனக்கே சொந்தமென்றது!

சத்தம்கேட்டு வேகமாய் வந்தது
உள்ளிருந்த மற்றோர் குரங்கு! அவற்றுக்குள்
ரகசியம்பேசி வழிவிட்டன எனக்கு!

கையில் இருந்த பொருட்களை
பறித்தது ஒரு குரங்கு!

ஏனிந்த விபரீத மென்று!
கடவுளிடம் முறையிட சென்றேன்!
அங்கேயும் ஓர் குரங்கு!
ஆண்டவனுக்கு ஏஜென்ட் என்றது!

புரியாத மொழியில் பிதற்றியது
என் பிரார்த்தனையை கலைக்க!

முறையிட வந்த இடத்திலேயே குறையா?
என்று நொந்தபடி திரும்ப!

ஒய்யார மேடையிலே வாலைச்
சுருட்டி அமர்ந்தது ஓர்குரங்கு!
தன்னை வணங்கச் சொன்னது
தானே கடவுள் என்று!

அதையும் பலர் வணங்கினர்!
அதுகூறிய கதைகளில் மயங்கி!

காமத்தைக் கடந்து
யோகத்தை அடையும் தத்தவத்தை விளக்கும் கோவிலில்!
கலவிக் கல்வி பயில்கின்றன
சில குரங்குகள்!

அழகாய்ப் பேசி மறைத்தன!
அக்குரங்குகளை விரட்டும் குச்சியாம்
என் சுயமரியாதையை!

உளவுபார்த்து உருவின நான்
அறியாமல் என்உடை வாளை!

குரங்குகள் தெய்வமானதால்
கடவுள் கல்லாகிப் போனானா?
அல்லது!
கடவுள் கல்லானதால்
குரங்குகள் தெய்வம் ஆனதா?

விடை எதுவானாலும்!
குரங்குக்கு மிஞ்சியது கொண்டாட்டம்!
எங்கள் குலத்துக்கு மிஞ்சியது அவமானம்!

                -- தல்லிதாசன்

நன்னாள் எந்நாளோ???

அழகான மாலைப் பொழுது!
அமைதியான சாலை!
சில்லென்ற தென்றல் காற்று!
வழியெங்கும் மரங்கள்!
காற்றோடு கதைபேசும் இலைகள்!
துள்ளிக் குதிக்கும் மலர்கள்!
லேசாய்த் தூறூம் மழை!
தூரத்தில் கேட்கும் அலையோசை!
அந்த அற்புத தருணத்தில்!
உன்கரம் கோர்த்து!
உன்தோளில் தலைசாய்த்து!
கதைபேசி நடை பழகும்
நன்னாள் எந்நாளோ???

                -- தல்லிதாசன்

என் தேசத்தில் என் விருப்பம்

கடைகள் இல்லாத நடைபாதை!
கரும்புகை இல்லாத வாகனங்கள்!
மழைநீைரை சாலைகளில் தேக்காமல் 
நிலத்தடியில் சேமிக்கும் வடிகால் அமைப்பு!
தடையில்லா மின்சாரம்!
கட்டணமில்லாத கல்வி!
விலையில்லாத மருத்துவம்!
குடிசைகள் இல்லாத குப்பங்கள்!
பசியில்லாத குழந்தைகள்!
பாதுகாப்பாய் உணரும் பெண்கள்!
இணையத்தில் இருந்தாலும் தனிமனித சுதந்திரம்!
நெரிசல் இல்லாத பேருந்து பயணங்கள்!
எலிகள், கரப்பான்கள் இல்லாத ரயில் பயணம்!
சீரான சாலைகள்!
அமரர் ஊர்தியாய் மாறாத ஆம்புலன்சுகள்!
நேரத்தின் அருமை உணர்ந்த ரயில்கள்!
பெட்ரோல் டீசல் விலையைப் பொறுத்து 
மாற்றம் காணாத  விலைவாசி!
அன்னிய ஆதிக்கம் இல்லாத தொழில்வளர்ச்சி!
இலவசங்களை வெறுக்கும் மக்கள்!
சறுக்கல்கள் இல்லாத சட்டங்கள்!
ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் 
தனிமனித ஒழுக்கம்!
ஆதாயம் தேடாத அரசியல்வாதிகள்!
தீண்டாமை பார்க்காத கடவுள்கள்!
சாதிகள் இல்லாத சமுதாயம்!
மதுக்கடைகள் இல்லாத மாநிலம்!
நஞ்சு கலக்காத விவசாயம்!
உழவனை போற்றும் உள்ளங்கள்!
மனைகளாக மாறாத விவசாய நிலங்கள்!
கலப்படமில்லாத உணவுப் பொருட்கள்!
தரமான புது நூல்கள்!
வீடு தோறும் நூலகம்!
வீதி தோறும் விளையாட்டு மைதானம்!
அனைவருக்கும் சமமான கல்வி!
தாமதமாகமாத தீர்ப்புகள்!
தம்வரலாற்றை அறிந்த மக்கள்!
ஆபாசமில்லாத கலைத்துறை!
தம்கருத்தை மக்கள் மீது திணிக்காத ஊடகங்கள்!
கழிவுநீர் கலக்காத நதிகள்!
மரங்கள் நிறைந்த சாலைகள்!
அனைவருக்கும் பட்டப்படிப்பு!
வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத நிலை!
கருப்புப் பணத்தை பதுக்காத கரங்கள்!
வட்டி இல்லாத கடன்கள்!
அனைவருக்கும் வீடு!
ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லா சமச்சீர் சமுதாயம்!
கொள்ளை போகாத இயற்கை வளங்கள்!
ஆளில்லாத சிறைகள்!
அடிமைத்தனம் இல்லாத வாழ்க்கை!
இதுபோல் விருப்பங்கள் உனக்கும் உண்டு!
நம்மக்களை முன்னேற்றும் எண்ணங்கள் உண்டு!
நம் விருப்பங்கள் நிறைவேற!
நம் எண்ணங்கள் ஈடேற!
நமக்கு வேண்டும்!
நம் அடையாளத்தில் நமக்கென நம்தேசம்!
தமிழ் தேசம்!!!

                -- தல்லிதாசன்

சொல்லாமல் தவிக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன் என் காதலை!
நீ மறுத்து விடுவாய் என்பதற்கல்ல!

விழி, செவி, வாய் என
இடைத் தரகர்கள்  யாரும் இன்றி!

தனிமையில் பேசத் துடிக்கும்
என்இதயத்தின் வேண்டுகோள் 
உம்இதயத்தை எட்டும் நாளுக்காக!

                   --  தல்லிதாசன்

வறண்ட பூமியின் தாய்ப்பாசம்


நான் தண்ணீர் கேட்பது
என் தாகத்திற்கு அல்ல!
மகனே!
உன் பசியைப் போக்க!
                     -- தல்லிதாசன்

கவிதை வேண்டுமா?

காதல் வந்தால் கவிதையும் வரும் என்றார்கள்!
முயற்சித்தேன்! ஆனால்
 
உம்பெயரைத் தவிர  வேறு வார்த்தையை 
சுமக்க மறுக்கிறது  இதயம்!

இருந்தும் நான் கவிஞனானேன்!!!

கவிதை வேண்டுமா?
சற்றேஎன் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்!

                     -- தல்லிதாசன் 

தனிமையே துணை

நிழலுக்கும் துணையிருக்கும் உலகில்
என்னைத் தனியேவிட மனமின்றி
துணையாய் வந்தாயோ தனிமையே!!!

               -- தல்லிதாசன்

மௌனம்

தென்றலின் மௌனம் மலருக்கு வலி!
கடலின் மௌனம் கரைக்கு வலி!
மேகங்களின் மௌனம் பூமிக்கு வலி!
வேர்களின் மௌனம் இலைகளுக்கு வலி!
அருவிகளின் மௌனம் நதிகளுக்கு வலி!

இவையாவும்!

வலியை வௌியே சொல்லாமல்
உள்ளுக்குள் உருகுவது உண்மை!

என்னால் தாங்க முடியவில்லை
உம்மௌனம் தரும் வலியை!

முள்ளோ? மலரோ! எதுவாயினும்
ஏற்றுக் கொள்ளும் பக்குவமுண்டு!
மௌனம் மட்டும் வேண்டாம்!!!
                      -- தல்லிதாசன்

உணர்வாயா காதலை


நதியின் வேகம்தான் உன்காதலின் ஆழமும்!
கண்களால் மட்டும் அளவிட முடியாது!

வேகத்தை தடுக்கும் தடை அல்லது!
சேர்ந்து பயணிக்க விரும்பும் மலர்வேண்டும்!

உன்மன மென்னும் நதியின் மேல்
என் காதல் மலரை இட்டுப்பார்!

அப்போது புரியும்!
நம் காதலின் வேகமும் ஆழமும்!
                   -- தல்லிதாசன்

உம்மருகே நானிருக்கையில்


துடிக்க மறந்தது இதயம்
உம்பேச்சை ரசிக்கும் இனிமையில்!

உம்மை ரசித்த விழிகளுக்கு
மற்ற காட்சிகள் யாவும்
வௌ்ளைக் காகித மாகின!

உம்மோடு பேசத்துடிக்கும் ஆவலில்
ஆனந்தக் கூத்தாடின இதழ்கள்!

உம்இதழ் வடிக்கும் வார்த்தைகளை
வரமாய் எண்ணி மகிழ்ந்தன செவிகள்!

மௌனமாய் தவமிருந்தன கரங்கள்
உம்கரம் பற்றும் வரம்வேண்டி!

                  -- தல்லிதாசன்

நிச்சயம் இது காதலல்ல


மொட்டுக்களை திறக்க 
அலைமோதும் தென்றல்போல்
உம் மனதை திறக்க தவிக்கிறேன்!

பார்த்தவுடன் வரவில்லை உம்மேல் ஆசை!
உம்மோடு பழகிய இனிமையில் வந்ததது!

கேள்விகள் கேட்க ஆசை உம்மை அறிய!
ஏனோ தடுக்கிறது மனது!
உமக்கு தொல்லை கொடுக்க கூடாதென்று!

விழிகளில் என்றும் உம் பிம்பம்!
இதயத்தில் என்றும் உம் நினைவுகள்!
செவிகளில் என்றும் உம் குரல்!
இதழ்களில் என்றும் உம் பெயர்!

வரமாகக் கேட்டேன் இறைவனிடம்! அவனோ
முடிவை உம்கையில் கொடுத்து விட்டான்!

நானறிவேன் நிச்சயம் இது காதலல்ல!
அதேநேரம் இச்சை கொண்ட காமமுமல்ல!

உம்மேல் கொண்ட அன்பென்னும் விதை!
செடியாய் வளர்ந்துவிட்ட செய்தியை சொல்கிறேன்!
                     -- தல்லிதாசன்

காதல் வந்தால்


கல்லைக் கண்டால் உன்னில்
ஓர் சிற்பி தெரிவான்!

காகிதத்தைக் கண்டால் உன்னில்
ஓர் ஓவியன் தெரிவான்!

கண்ணாடியைக் கண்டால் உன்னில்
ஓர் அழகன் தெரிவான்!

எப்பொருளைக் கண்டாலும் உன்னில்
ஓர் கவிஞன் தெரிவான்!

இவையெல்லாம் தெரிந்தால்தான் உன்னில்
காதல் வந்ததென்று பொருளல்ல!

அமைதியாய் ஓர் நிமிடம்
உன் கண்களை மூடிப்பார்!

உன் இதயத்தின் நிழல்
பிம்பமாய் தெரியும்!

அப்பிம்பம் சொல்லும்!
நீ காதல் கோட்டையின்
அன்புச் சுவர்களுக்குள் அடைபட்ட உண்மையை!!!

                        -- தல்லிதாசன்

சாதிவெறி


ஓராயிரம் வலிகள் தரும்
 ஒற்றை வார்த்தை!

போலி வாழ்வை விரும்பும் 
மடையர்களின் அன்புக் குழந்தை!

இளம் உயிர்களை காவு 
கேட்கும் காட்டேரி!

இந்தச் சமூகத்தை அரிக்கும்
 கரையான் புற்று!

மனிதனை மிருகமாய் மாற்றும் 
பாரம்பரியப் பிழை!

மணவறையை பிணவறையாய் மாற்றும் 
சுடுகாட்டின் கைக்கூலி!

பிஞ்சு உள்ளங்களில் ஆறாத 
வடுக்கள்தரும் நெருப்பு!

மனிதனுக்கும் கடவுளுக்குமே 
இடைவௌி தந்த தடுப்புசுவர்!

மனிதனை அடிமையாய் அடக்கியாள 
போதிக்கப்படும் துர்போதனை!

இவ்வடிமைத்தளையை வரமாய் 
என்னும் மூடர்களின் மனக்கறை!

கொடுத்தது போதும் உயிர்பலிகள்!
நசுக்கியது போதும் பிஞ்சு உள்ளங்களை!
போதுமிந்த அடிமை வாழ்க்கை!

பெரியார் விட்டுச்சென்ற பணியை
தொடர வேண்டிய நேரமிது!
அம்பேத்கர் காணத்துடித்த மாற்றத்திற்கு
அடித்தளம் அமைக்கும் நேரமிது!

சாதிகளற்ற சமூகம் அமைக்க!
புதுப்புரட்சிப் புனையும் நேரம்வந்தது!
புறப்பட்டு வாதோழனே!
சரித்திரத்தை திருத்தி யமைக்க!!!

               -- தல்லிதாசன்

காதல் வந்தால் சொல்லி யனுப்பு

காலையில் காதல் வந்தால்
தென்றலிடம் சொல்லி யனுப்பு!
ரோஜாக் கூட்டத்தை கொண்டு வருவேன்!

உம் வாசலில் பூக்க வைக்க!
பிற்பகலில் காதல் வந்தால்
உனை  நீங்காத என் 
நினைவுகளிடம் சொல்லி யனுப்பு!
தகிக்கும் சூரியனுக்கு தடைபோட முகிலினைக்
கொண்டு வருவேன் உம் வாசலில்!

மாலையில் காதல் வந்தால்
மல்லிகை வாசத்திடம் சொல்லி யனுப்பு!
மூன்றாம் பிறையோ! முழுநிலவோ!
உம் எண்ணப்படி கொண்டு வருவேன்!

இரவில் காதல் வந்தால்
கலையாத கனவுகளிடம் சொல்லி யனுப்பு!
உம் இலட்சியத்தை ஈடேற்ற
வருவேன்! என்றும் உறுதுணையாக!

             -- தல்லிதாசன்

நட்பில் ஓர் பிரிவு


ஒளியில் தெரியும் நிழலது
இருளில் தெரிவது இல்லை!

அதுவிலகிச் சென்றதாய் அர்த்தமில்லை!
உள்ளிருந்து வழிநடத்த ஒன்றிணைந்தது!

உடல்கள் பிரிந்து இருந்தாலும்
உள்ளத்தில் நெருக்கம் சேர்க்கும்!
உண்மைநட்பில் தோன்றும் பிரிவு!

             -- தல்லிதாசன்

முல்லை


சுட்டெரிக்கும் சூரியனின் சூடு
தாங்காமல் மூடிவைத்த தன்னழகை!

முழுமதி யனுப்பிய தென்றல் கடிதத்தின்
முகவரி பார்க்க திறக்கிறது! முல்லை!!!
                       -- தல்லிதாசன்

காத்தருக்கிறேன் நான்!


பணியில் நானிருந்தால்
என்மனதை உனைநோக்கி
பறக்க வைத்தாய்!

வீதியில் நான்நடந்தால்
இதயத்தை உன்நினைவில்
துடிக்க வைத்தாய்!

உள்ளத்தில் நீயிருந்து
உண்ணும் உணவில்
நாட்டம் குறைத்தாய்!

உறங்கினாலும் கனவில்
முத்தமழையால் நெஞ்சில்
காயம் தந்தாய்!

வயதுத் தீயில் வாடிய
என்வதனம் காண வாராயோ!
ஏக்கத்தால் களையிழந்த
என்தேகம் காண வாராயோ!

காத்தருக்கிறேன் நான்! - பெண்ணே
நம்நிழல்களை நிழலாக்க!!!
                            - தல்லிதாசன்

வியாழன், 26 மார்ச், 2015

ஏற்பாயா என் காதலை?:::




கரையோரம் பூக்கள் சொறிந்தன மரங்கள்!
நதியிடம் தன் காதலைச் சொல்ல!

நீலக் கடலின்மேல் பட்டாடை போர்த்தினான்
கதிரவன்! தன் காதலைச் சொல்ல!

மழைத்துளி கொண்டு முத்தமிட்டான் வானமகன்!
நிலமகளிடம் தன் காதலைச் சொல்ல!

நிலவோடு நடை பழகின மேகங்கள்!
அடங்காத தன் காதலைச் சொல்ல!

உன்விழி பேசும் மொழியை அறிந்து!
உம் எண்ணத்தில் என்னைக் கலக்க!

ஆவலாய் காத்தி ருக்கிறேன் நான்!
ஆசையாய் என் காதலைச் சொல்ல!
                -- தல்லிதாசன்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை ( PROTOCOLS )


     நிலையற்ற பொருளாதாரம், உள்நாட்டுப் போர்கள், கலவரங்கள், அதனால் நிகழும் ஆட்சி மாற்றங்கள் அல்லது ஆட்சி கவிழ்ப்புகள், திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள், தீவிரவாதப் பெயரில் நிகழும் அட்டுழியங்கள் என உலகின் குழப்பமான சூழ்நிலைக்கு மூல காரணம் என்ன? ஊடகம், பொருளாதாரம், கல்வித்திட்டம், அரசியல், அரசு இயந்திரம் என அனைத்திலும் தங்களுடைய ஆளுமையை செலுத்தி உலகையே ஆளத்துடிக்கும் ஓர் இனத்தின் கடமையாய் விளக்கப்பட்ட பட்டியலின் சாரம் என்ன? பல நூற்றாண்டு காலமாக தனக்கென தனி தேசம் கூட இல்லாமல், நாடோடிகளாய், வந்தேறிகளாய் உலக நாடுகளில் தஞ்சமடைந்த ஒரு இனம் இந்த உலகையே வசப்படுத்த தீட்டிய நயவஞ்சகத் திட்டம் என்ன?இந்த கேள்விகளுக்கான பதிலை தங்கள் பலவீனத்தை பலமாக மாற்றி, யூதர்கள் என்னும் புத்திமான்கள் விரித்த மாயவலையின் ஒவ்வொரு நூலாய் எடுத்துரைக்கிறது இந்நூல்.
     மக்களை முட்டாள்களாக்கி, உலகின் பல நாடுகளை தங்கள் கைப்பாவையாக மாற்றிய ராஜதந்திரத்தை விளக்கும் யூதர்களின் அறிக்கை,தற்போதைய பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வையும் கூறுகிறது.  உலக நாடுகள் அனைத்தையும் ஜெர்மனியின் காலனியாக்கத் துடித்த ஹிட்லர், தனக்கு போட்டியாக யூதர்கள் இருக்க கூடாது என்று எண்ணித்தான் அவர்களை இரக்கமின்றி கொன்று குவித்தாரோ? என்ற கருத்துக்கும் விளக்கமுண்டு பின்னினப்பில்.
     சுருக்கமாக சொல்வதானால் உலகின் இன்றைய தலையாய பிரச்சினைகளுக்கு மூல காரணமும், அதற்கான தீர்வுகளும் அடங்கியது இந்த அறிக்கை.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல்.
                       - தல்லிதாசன் 

மது


மனைவி மக்களை மறந்து
சிற்றின்பச் சிறகைத் தேடும்
மடையனுக்கு உற்சாக பானம்!

பிள்ளைகளின் பசியைக் கண்ட
அவனது மனைவியின் வயிற்றில்
அடுப்பை ஏற்றும் எரிபொருள்!

நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு
காத்திருக்கும் அவன் பிள்ளைகளின்
வாழ்வை சிதைக்கும் திராவகம்!

சீர்கெட்ட மகனைக் கண்டு
நித்தம் நித்தம் மரணிக்கும்
அவனது பெற்றோரின் கண்ணீர்!

ஒழுக்கத்தை ஒடுங்க வைத்து
சமூகத்தை சீரழிக்கத் துடிக்கும்
நயவஞ்சகர் காக்கும் நஞ்சு!

அன்னை தரும் அன்புபோதை!
தந்தை தரும் அறிவுபோதை!
மறந்தா சென்றாய் மதுக்குடிக்க?

மனைவி தரும் இன்பபோதை!
மழலை தரும் செல்லபோதை!
மறுத்துப் போனாயோ மதுக்குடிக்க?

மயக்கத்தில் மதியிழக்கும் மனிதனே
சற்றே யோசி! மதுதரும்
போதை மாயையென்று தெரியும்!
                     - தல்லிதாசன்

எபோலா வைரஸ்


உலகையே ஆளத்துடிக்கும்
வஞ்சக நரிகளின் சிந்தனையில் பிறந்த வேதனை!

மனிதாபிமானத்தை மறுதளித்த 
பணப்பேய்களின் வீட்டுப்பயிர்!

மருத்துவப்பெயரில் கொள்ளையடிக்க 
திறந்த மற்றுமொறு வாசல்!

நோய்க்கு மருந்தெனும் காலம் சென்று! 
மருந்துக்கு நோய்தேடும் மறுமலர்ச்சியின் அடையாளம்!!!
                                    - தல்லிதாசன் 

நாம் யார்?


மண் குடிசையில் வாழ்ந்தாலும்
மனிதாபிமானத்தில் மன்னர்கள் நாம்!

எதிரியையும் நாணச் செய்யும்
விருந்தோம்பலின் விற்பன்னர்கள் நாம்!

செய்நன்றி மறவாத மனதால்
நன்றியுணர்வு நிறைந்தவர்கள் நாம்!

பொறியியல் மருத்துவம் கலையென
அறிவியலின் ஆதாரம் நாம்!

புறமுதுகை புறக்கணிக்கும் நெஞ்சுரத்தில்
வீரத்தின் விளைநிலம் நாம்!

வீரத்தால் வெல்ல முடியாததால்
வஞ்சனையால் வீழ்த்தினர் நம்மை!

ஆம்!சாதி மதம் மொழியென
நஞ்சை கலந்தனர் நம்நெஞ்சில் !

நம்கரத்தால் நம்கண்களை குருடாக்கி
அளவின்றி அபகரித்தனர் நம்செல்வங்களை!

வாழ வழின்றி தவித்தவர்கள்
நம்மை அடிமையாக்கி ஆள்கின்றனர்!

ஏனிந்த அடிமைத் தூக்கம்!
எழுந்துநில் சற்று சிந்தித்துப்பார்?

உன்னைப் படைத்த இறைவனிடம்
நீபேச, வேண்டுமோ ஓர்தரகர்!

வியாபாரம் பேசி விலைக்கு
வாங்க வேண்டுமா சந்தோசத்தை!

அகற்று உன் அறியாமையை
ஆண்டவன் தெரிவான்!
ஆண்டவன் மட்டுமே தெரிவான்!
                     -  தல்லிதாசன்