சனி, 27 ஜூலை, 2013

இறைவன் கொடுத்த வரம்

அழுதால்தான் அன்னையும்  அறிவாள் 
                          குழந்தையின் பசியை!
ஆயிரம் மைல்கள் அப்பாலிருந்தும் - வார்த்தைகளின்றி 
              உள்ளக்குறிப்பறியும் உண்மை நட்பு!

தாயில் சிறந்த தெய்வமில்லை உலகில்!
ஆனால் தாய்க்கு நிகரான 
               தங்க உறவுகள் - நண்பர்கள்!

நன்றிக்கு அர்த்தமில்லை 
                நட்பின் அகராதியில்!
அதனால் கவிவரியில் நன்றியுரைத்தேன் 
               வரமாய் நண்பர்களைத் தந்த 
                                  இறைவனுக்கு!
                                      
                              -- தல்லிதாசன்


அன்பு நண்பர்கள் அருண் மற்றும் ஆனந்துக்கு சிறப்பு அர்ப்பணம்.


வியாழன், 9 மே, 2013

உணர்வு

நித்தம் தவிக்கிறேன்!
                       நித்திரையின்றி!
தொப்புள்கொடியில் பசியாறும்
                  அற்புத தருணம் நோக்கி!

                                            - தல்லிதாசன்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

மனிதன்

விட்டில் பூச்சியின்
விலாசம் தேடி
அலையும் - விண்மீன்!!!


                     - தல்லிதாசன்.
         

புதன், 16 ஜனவரி, 2013

ஒரு ஊமையின் கண்ணீர்


மாற்றம் என்னும் மாறிலியின்
       மகிமையறியா மழலை நான்!
கொட்டும் மழையின் கீதத்தை
       நித்தம்தேடும் குழந்தை நான்!
வருடம்முழுதும் வாடாத வாசமலர்
      வேண்டும் அப்பாவி நான்!
கிடைத்தது கடலாய் இருக்க!
       அண்டம்கொள்ள ஆசை கொண்டேன்!
ஆகாயம் என்னும் மாயத்திரையை
        மனதில் மாட்டிக் கொண்டு!

                                       - தல்லிதாசன்






சனி, 5 ஜனவரி, 2013

முக்கோணக் காதல்

கற்பனைக் காற்றினில் காகிதமாய்
                               நான் பறந்து!
விண்ணைத் தொட்டு
                       பிரதியெடுத்தேன்!
வெண்ணிலாவின் பால்முகத்தை!

வண்ணங்கள் சங்கமித்த
          முத்துப்பேழையில் மூடிவைத்தேன்!
அந்த அழகோவியத்தை!

இந்த ஆடவனின் கைத்தொட
பூத்துநின்ற முழுமதியவள்
          நாணித்தான் போனாள்!
மூன்றாம் பிறையாக!
கொண்டவன் நெற்றியில்
                திலகமாய் வீற்றிருக்க!

இதையறியாத ஆதவன்!
கீழ்த்திசையில் கண் விழித்து!
மேல்திசை நோக்கி தெடுகிறான்
இந்த அழகு தேவதையை!

                                 - தல்லிதாசன்