புதன், 16 ஜனவரி, 2013

ஒரு ஊமையின் கண்ணீர்


மாற்றம் என்னும் மாறிலியின்
       மகிமையறியா மழலை நான்!
கொட்டும் மழையின் கீதத்தை
       நித்தம்தேடும் குழந்தை நான்!
வருடம்முழுதும் வாடாத வாசமலர்
      வேண்டும் அப்பாவி நான்!
கிடைத்தது கடலாய் இருக்க!
       அண்டம்கொள்ள ஆசை கொண்டேன்!
ஆகாயம் என்னும் மாயத்திரையை
        மனதில் மாட்டிக் கொண்டு!

                                       - தல்லிதாசன்






3 கருத்துகள்: