வியாழன், 10 ஜனவரி, 2019

இதயத்தின் வலி

உன் இதயம் கவரவே!
உருகித் தவிக்கிறேன்!

என் இதயம் புரியவே!
கவிதை அனுப்பினேன்!

மழையின் சாரல் மனதில் வீச!
இதயம் ஏனோ அனலில் வாடுது!

மலையின் பாரம் பனியாய் மாற!
மலரின் தேனோ மடுவில் சேருது!

இன்பமும் துன்பமும் வாழ்வின் அங்கமாம்!
ஆனால் எனக்கோ!
இன்பத்தின் அங்கமாய் துன்பமும்!
துன்பத்தின் அங்கமாய் இன்பமும்!
இரண்டறக் கலந்தது! - காரணம்!
என் வாழ்வின் மொத்தமாய் நீ இருக்கிறாய்!

                                   — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக