வியாழன், 3 ஜனவரி, 2019

தனிமை

ஆளில்லாத தீவில்!
முள்ளில்லாத காட்டில்!
 காட்சிகளை பதப்படுத்தி
கவிதை புனைந்து!
என் கனவுக்கு உருவங்கொடுத்து
கதைகள் படைத்து!
எனக்கான பாதையில் 
ஓர் இனிய பயணம்!

பாதை முடியுமா? இல்லை
பயணம் முடியுமா? நானறியேன்!
ஆனால்!
பொழுது மட்டும் விடிந்து கொண்டிருக்கிறது! 
அதில்!
நாட்கள் தான்  கழிந்து கொண்டிருக்கின்றன!

                                  — தல்லிதாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக