கண்மூடி வாழ்கிறேன்!
மானொன்று மன்றாட! வேடனவன்
கவிவரியில் கண்ணீர் வடித்தேன்
- தல்லிதாசன்
கனவில் மிதப்பதற்கு
அல்ல!
என் கண்ணீரை
மறைப்பதற்கு!
காணாத முத்தொன்றை
நான்கண்டேன்!
என்றெண்ணி கையில்கொண்டேன்!
கண்ணாடிக்கல்லை!!!
அதுதந்த காயம் ஆறியது உடலில்!
மறுக்கிறது மனதில்!
மானொன்று மன்றாட! வேடனவன்
அறம்மறந்து அதைத் துண்டாட!
ஆண்டுகள் பலஆனாலும்
ஆறாத அந்தக் காயத்தால்!
கண்ணீராய் செந்நீர் வடிக்கிறது
புறம் புரியாத புள்ளிமான்!
கவிவரியில் கண்ணீர் வடித்தேன்
என் சோகம் சொல்லி!
அதன்கருத்தைக் கண்டார் இல்லை!
சொன்னாலும் ஏற்பார் இல்லை!
அதனால் தேடுகிறேன் ஒருஇதயம்!!!
என்தோள் சாய்த்து கதைசொல்ல!
என்கரம் கோர்த்துக் கடக்க
இந்த வாழ்க்கைக் கரையை!!!
- தல்லிதாசன்
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு