கவி வடித்தேன் நான்! - ஆம்!
விழிசெவி இரண்டின் வேதனையை
கவிதையாய் வடித்தேன்!
முறத்தால் புலிவிரட்டிய தமிழச்சியின்
மறத்தை வடித்தேன்!
தன்னலம் மட்டுமே பேணும்பேடியின்
கயமை விடுத்து!
ஏர்பிடிக்கும் ஏழை உழவனின்
கண்ணீரை வடித்தேன்!
பதுக்கல் பேர்வழிகளின் இரக்கமற்ற
மனதை விடுத்து!
சுதந்திரக் காற்றை சுவாசிக்க!
செந்நீர் சிந்திய செம்மல்களின்
தியாகம் வடித்தேன்!
இன்றைய ஊழல்ஊதாரிகளின் வாரிச்சுருட்டும்
வல்லமை விடுத்து!
நம்மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின்
தேசத்துரோகம் வடித்தேன்!
அகண்டபாரதம் எனும்அவனது அளப்பறியா
ஆவல் விடுத்து!
சொந்தமண்ணுக்கு போராடிய என்சொந்தங்களின்
துயரம் வடித்தேன்!
அந்தத் துயர்துடைக்கத் துப்பில்லாத - என்
வெட்டிப்பேச்சின் வீரம் விடுத்து!
இனிவடிக்கத் துடிப்பதெல்லாம்! ஓர்
இனிய கவிதை! - அது!
ஏழைகள் இல்லாத நம்பாரதத்தில்!
எங்கும் பொங்கும் ஆனந்தக்கண்ணீரின்
இன்பக் கவிதை!!!
- தல்லிதாசன்
விழிசெவி இரண்டின் வேதனையை
கவிதையாய் வடித்தேன்!
முறத்தால் புலிவிரட்டிய தமிழச்சியின்
மறத்தை வடித்தேன்!
தன்னலம் மட்டுமே பேணும்பேடியின்
கயமை விடுத்து!
ஏர்பிடிக்கும் ஏழை உழவனின்
கண்ணீரை வடித்தேன்!
பதுக்கல் பேர்வழிகளின் இரக்கமற்ற
மனதை விடுத்து!
சுதந்திரக் காற்றை சுவாசிக்க!
செந்நீர் சிந்திய செம்மல்களின்
தியாகம் வடித்தேன்!
இன்றைய ஊழல்ஊதாரிகளின் வாரிச்சுருட்டும்
வல்லமை விடுத்து!
நம்மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின்
தேசத்துரோகம் வடித்தேன்!
அகண்டபாரதம் எனும்அவனது அளப்பறியா
ஆவல் விடுத்து!
சொந்தமண்ணுக்கு போராடிய என்சொந்தங்களின்
துயரம் வடித்தேன்!
அந்தத் துயர்துடைக்கத் துப்பில்லாத - என்
வெட்டிப்பேச்சின் வீரம் விடுத்து!
இனிவடிக்கத் துடிப்பதெல்லாம்! ஓர்
இனிய கவிதை! - அது!
ஏழைகள் இல்லாத நம்பாரதத்தில்!
எங்கும் பொங்கும் ஆனந்தக்கண்ணீரின்
இன்பக் கவிதை!!!
- தல்லிதாசன்
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு