ஒருமுறை என்னைப் பார்!
உன்னைக் காண ஏங்கும்
கண்களின் ஏக்கம் புரியும்!
அதில் நிரம்பி வழியும்என்
இதயத்தின் வலிகள் புரியும்!
இமைக்க மறந்த இமைகளின்
நெடுநாள் துயரம் புரியும்!
உன்னோடு பேசத் துடிக்கும்
இதழ்களின் இயலாமை புரியும்!
இவையெதுவும் புரிய வில்லையா?
கன்னக் குழிகளை நிறைத்த
கண்ணீர்த் துளிகளைப் பார்!
என் உயிரின் பிம்பம்!
உன் உருவமாய் தெரியும்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக