ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

மது


மனைவி மக்களை மறந்து
சிற்றின்பச் சிறகைத் தேடும்
மடையனுக்கு உற்சாக பானம்!

பிள்ளைகளின் பசியைக் கண்ட
அவனது மனைவியின் வயிற்றில்
அடுப்பை ஏற்றும் எரிபொருள்!

நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு
காத்திருக்கும் அவன் பிள்ளைகளின்
வாழ்வை சிதைக்கும் திராவகம்!

சீர்கெட்ட மகனைக் கண்டு
நித்தம் நித்தம் மரணிக்கும்
அவனது பெற்றோரின் கண்ணீர்!

ஒழுக்கத்தை ஒடுங்க வைத்து
சமூகத்தை சீரழிக்கத் துடிக்கும்
நயவஞ்சகர் காக்கும் நஞ்சு!

அன்னை தரும் அன்புபோதை!
தந்தை தரும் அறிவுபோதை!
மறந்தா சென்றாய் மதுக்குடிக்க?

மனைவி தரும் இன்பபோதை!
மழலை தரும் செல்லபோதை!
மறுத்துப் போனாயோ மதுக்குடிக்க?

மயக்கத்தில் மதியிழக்கும் மனிதனே
சற்றே யோசி! மதுதரும்
போதை மாயையென்று தெரியும்!
                     - தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக