புதன், 7 நவம்பர், 2018

தனிமை

காற்றில் ஒருகீதம் எந்தன்
கண்ணீரைப் பாட! - அதனைக்
கேட்க ஒருஜீவன் இன்றி
என்காதல் வாட!

கவிதை என்னும் 
மொழியில் எந்தன்
விழியின் ஈரம்
மறைந்து போகுதே!

ஒரு நொடியில் எனதுயிரை
உனதாக்கிச் சென்றாய்!
உயிர் பிரிந்த உடலினிலே
எதைத்தேடி வந்தாய்!

காற்றின் மீது
தீட்டும் வண்ணம்!
உணர்வைச் சொல்லும்
கலைகள் ஆகுமா?

                              — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக