காலைத் தென்றல்
கதிரவனுக்குப் புதிதல்ல!
பேசும் ரோஜா
காதலுக்குப் புதிதல்ல!
மயிலின் நடனம்
கார்முகிலுக்குப் புதிதல்ல!
சிந்தும் மழைநீர்
மண்ணுக்குப் புதிதல்ல!
அலையின் ஓசை
கடலுக்குப் புதிதல்ல!
ஆனால்!
காலைத் தென்றலில்
உன்மூச்சுக் காற்று புதிது!
ரோஜா இதழ்களில்
உன்வண்ணம் புதிது!
மயிலின் நடனத்தில்
உன்நடை அழகு புதிது!
மழையில் கரைந்த
உன்மேனி முத்துக்கள் புதிது!
அலையின் ஓசையில்
உன்கீதங்கள் புதிது!
என்வாழ்வின் புதுமையே!
எனக்கில்லை பொறுமையே!
உனைக் கண்ட முதல்நொடி
கனவா? நினைவா?
இன்னும் தீரவில்லை குழப்பம்!
உன்னோடு நான்பேசும் மொழி
கற்பனையா? கவிதையா?
இன்னும் தெளியவில்லை மயக்கம்!
மயக்கம் தெளியாமல் குழம்பி நிற்கிறேன்
உன்னை கரம்பிடிக்கும் நன்னாளை எதிர்பார்த்து!
—தல்லிதாசன்
11/12/2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக