சன்னல் ஒரத்தில் சீறிப்பாய்ந்த
ஒளிக்கீற்று தட்டி எழுப்பிட
கண்விழித்தேன் காலை வந்ததென்று!
கனவில் உனக்குப் பரிசளிக்க
ரோஜா மலர்களைத் தேடினேன்
மொட்டுக்கள் தான் தட்டுப்பட்டது!
ஆனால்! மலர்களின் நறுமணம் மட்டும்
என் நொடிகளை நிரப்பிக் கொண்டிருந்தது!
சற்றே சுதாரித்து ஆகாயத்தைப் பார்த்தேன்!
அங்கு நிலவாய் நீ!
என் இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கிறாய்!
உன்விழி பட்ட என் இதயமோ!
முல்லைப் பூக்களாய் பூத்துக் கொண்டிருக்கிறது!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக