வாத்து போல தலையறுத்து தினம்
கூத்து போல நடத்திக் காட்டுறான் - அதை
பாத்துக் கொண்டே கண்ணை மூடி
காத்து போல கடந்து போறோம்!
கத்திப் பட்ட பிஞ்சுக் கழுத்து
என்ன பாடு பட்டிருக்கும்! -அதைக்
கண்ணெதிரே கண்ட அன்னை நெஞ்சம்
என்ன துடி துடித்திருக்கும்!
காம வெறி கண்ணை மறைத்ததோ!
சாதி வெறி மனிதம் புதைத்ததோ!
நமக்கென்ன கவலை அதைப் பற்றி!
மூச்சுவிட நேரமில்லாத நமக்கு
கூச்சம் கூட துளியுமில்லை - அதனால்தான்
துச்சமாய் நினைத்து மறந்து போகிறோம்! அவன்
உச்சத்தில் நின்று கொட்டம் அடிக்கிறான்!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக