திங்கள், 5 நவம்பர், 2012

ஆசைத்துளிகள்


கார்மேகக் கூட்டமது 
                      காதலுடன் சேர்கையில் 
வண்ணச் சாமரம் வீசும் 
                        அழகு மயிலின் ஆட்டம் கண்டேன்!
பெண்ணே! 
வெள்ளிக் குடமதின் 
                   வெண்சங்குக் கழுத்தாம் 
                                   உன் இடையில்!


அல்லி மலரிரண்டு 
ஆசையுடன் கூடும்போது 
சிந்திய முத்தம்பட்டு 
நாணத்தால்  சிவந்த  செந்தாமரை 
              கண்டேன் உன் இதழில்!


அன்னநடை நடந்து பின்னழகில் நீ மீட்டும் 
                 வீணைகளின் இனிய கானத்தில்  
காமனவன் மெய் சிலிர்க்க 
கார்முகிலும்  நீர் சொரிய!
காற்றுகூட கீதம் பாட 
நான்மட்டும் நின்றேன் சிலையாய்!
முன்னமே உன்முன்னழகைக் 
                          கண்ட மயக்கத்தில்!


கண்டாங்கிப் புடவை கட்டி 
          கன்னி மணம் வீச 
கழனியில் நீ நடக்கையில்!
கட்டிக் கரும்பு தின்ற 
               குட்டிஎறும்பின் மயக்கம் 
                         இந்தக் காளை மனதில்!


விண்ணின்று வந்த மீனொன்றை
           பிறர்கண்  படாமல் இருக்க 
கரும்பொட்டு வைத்து வரவேற்றாள் 
                              பூமித்தாய்!  - உன் 
தங்கரத மேனியில் கண்களாய் பதிப்பதற்கு!


மொட்டவிழ்த்து பூத்துநின்ற புதுமுல்லையின்
வாசம்தொட்டு வந்த வெண்ணிலா!
மலைத்து நின்றது மண்ணிலிறங்காமல்!
                                         - பெண்ணே!
மன்மதபானமாய் ஒளிவீசும்
                                உன் ஓரவிழிப் பார்த்து !





                                                            -- தல்லிதாசன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக