காதல் மலரின் வாசமறியா
வண்டு நான்!
கனவுச் சோலையின் பாதையறியா
பறவை நான்!
கவியமுதின் சுவை அறியா
குழந்தை நான்!
கொடியிடை கோமகளே! - உன்
பொன்னிற பிம்பம் என்கண்ணில்
தோன்றும் வரை!
கண்முன்னே காட்சிகளாய் நீநிற்க!
காண்பதெல்லாம் கருவிழியைக்
கொள்ளைகொள்ள!
காண்பது கனவா?! நனவா?!- என்றறிய
என்னை நானே கிள்ளும்போது பிறந்த
நாதத்தில் அறிந்தேன் என்காதலை! - ஆம்!
நினைவெல்லாம் நித்யமாக!
எண்ணமெல்லாம் ஏஞ்சலாக!
செயலில்கூட என்செல்லம்! நீஇருக்க!
என் வாய்வடிக்கும் வார்த்தைமட்டும்
எப்படி வேறொன்று! - உன் பெயரைத்தவிர!
வென்பனி மோதி வெந்தது
என்இதயம்! - பெண்ணே!
உன் மைவிழிப் பார்வை
என்னை மையங்கொண்டதால்!
உன்செவ்விதழின் அழகொத்த மலரொன்றை
காதல் கொண்டு வருடியதால்!
தென்றலாய் முக்திபெற்ற காற்றது!
என்னைத் தீண்டும்போது - என்
நெஞ்சில் மோதியஉன் நினைவலைகளின்
மிச்சம் என்கண்களில் கண்ணீராய்!
முகிலின்றி மழை பெற்றேன்
உன் ஓரவிழிப் பார்வையால்!
செவ்வாயில் கால் பதித்தேன்
உன் செவ்விதழின் மொழிகேட்டு!
கண்இமைக்கும் நேரத்தில் கடல்கடந்தேன்
உன் கரம்பிடிக்கும் கற்பனையில்!
இவையெல்லாம் அன்பே!
என் வாழ்க்கைச் சோலை பூத்துகுலுங்கிய!
நம்நினைவில் நாம் மட்டும் நின்ற
அந்த வசந்த காலத்தில்!
ஆனால் இன்றோ கண்ணீர்கூட எனக்கு
கனவாகிப்போனது!
கல்லாய் மாறிய உன் இதயம் அறிந்து!
- தல்லிதாசன்.
வண்டு நான்!
கனவுச் சோலையின் பாதையறியா
பறவை நான்!
கவியமுதின் சுவை அறியா
குழந்தை நான்!
கொடியிடை கோமகளே! - உன்
பொன்னிற பிம்பம் என்கண்ணில்
தோன்றும் வரை!
கண்முன்னே காட்சிகளாய் நீநிற்க!
காண்பதெல்லாம் கருவிழியைக்
கொள்ளைகொள்ள!
காண்பது கனவா?! நனவா?!- என்றறிய
என்னை நானே கிள்ளும்போது பிறந்த
நாதத்தில் அறிந்தேன் என்காதலை! - ஆம்!
நினைவெல்லாம் நித்யமாக!
எண்ணமெல்லாம் ஏஞ்சலாக!
செயலில்கூட என்செல்லம்! நீஇருக்க!
என் வாய்வடிக்கும் வார்த்தைமட்டும்
எப்படி வேறொன்று! - உன் பெயரைத்தவிர!
வென்பனி மோதி வெந்தது
என்இதயம்! - பெண்ணே!
உன் மைவிழிப் பார்வை
என்னை மையங்கொண்டதால்!
உன்செவ்விதழின் அழகொத்த மலரொன்றை
காதல் கொண்டு வருடியதால்!
தென்றலாய் முக்திபெற்ற காற்றது!
என்னைத் தீண்டும்போது - என்
நெஞ்சில் மோதியஉன் நினைவலைகளின்
மிச்சம் என்கண்களில் கண்ணீராய்!
முகிலின்றி மழை பெற்றேன்
உன் ஓரவிழிப் பார்வையால்!
செவ்வாயில் கால் பதித்தேன்
உன் செவ்விதழின் மொழிகேட்டு!
கண்இமைக்கும் நேரத்தில் கடல்கடந்தேன்
உன் கரம்பிடிக்கும் கற்பனையில்!
இவையெல்லாம் அன்பே!
என் வாழ்க்கைச் சோலை பூத்துகுலுங்கிய!
நம்நினைவில் நாம் மட்டும் நின்ற
அந்த வசந்த காலத்தில்!
ஆனால் இன்றோ கண்ணீர்கூட எனக்கு
கனவாகிப்போனது!
கல்லாய் மாறிய உன் இதயம் அறிந்து!
- தல்லிதாசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக