வெள்ளநீரைத் தடுக்கும் அணையாய்
அங்கே எல்லையில் நம்வீரர்கள்
கண்ணுறங்காமல் நம்தேசம் காக்க!
நாட்டில் பெருக்கெடுத்த சாக்கடைகளின்
வாடையறியாமல் உறங்கிக் கிடக்கும்
இளைஞனே! - விழித்திடு!
நம்பாரத மண்ணின் பெருமையறி!
அதன்வளங்கள் சுரண்டப்பட்ட
வரலாற்றைப் படி!
வீணர்களின் கையில்சிக்கிய அதன்
பரிதாபநிலையைப் பார்!
இன்னும் ஏன் தாமதம்?????
உன்னைச் சுத்தமாக்கி இந்த
நாட்டைச் சுத்தமாக்க
வீறுகொண்டு எழுந்து வா!
ஊழல் ஊதாரிகளை விரட்டியடிக்க!
இலஞ்சப்பேய்களை வஞ்சம் தீர்க்க!
வீரநடை போட்டு வா!
உலகஅரங்கில் நம் பாரதத்தாயின்
பெருமை காக்க!
புறப்பட்டு வா தோழனே!
புதுப் புரட்சிப் புனைய!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக