திங்கள், 5 நவம்பர், 2012

அற்புத மந்திரம்


கனவுகள் பலகண்டு 
                   அதையடையும் வழி கண்டு
உல்லாச உலகில் உரிமம் 
                    பெற்றவன் நீ!

அன்பெனும் அறமறிந்து
        அற்புதங்கள் பலநிகழ்த்த 
ஆனந்த உலகில் அனுமதி 
                 பெற்றவன் நீ!

மெய்ஞானத்தின் மேன்மைபற்றி 
          வாழ்வின் நெறியுரைக்க 
தங்கத் தரணியில் தாள் 
         பதித்தவன் நீ!

இருலொழிக்கும் தீபமாய்!
                எங்கும்  அறிவுச்சுடரேற்ற
இன்ப உலகில் இசைபாடி 
                வந்தவன் நீ!

உற்சாக உளியெடுத்து 
            வெற்றிச் சிலைசெதுக்க
பரந்த பூமியில் பண்பாடு 
            புனைந்தவன் நீ!

நீ இரசித்து மகிழ 
          இதுவெறும் கவியல்ல!
உன் முன்னோரின் 
          பெருமைசொல்லும் துதியல்ல!


உன்மனக் கோவில் தெய்வமாம்!
              ஆனந்தத்தை தரிசிக்க!
அனுதினமும் உனக்குநீயே சொல்லவேண்டிய 
                  அற்புத மந்திரம்!
                                                       -- தல்லிதாசன்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக