உடலின் இயக்கம் உயிரானது போல்- இங்கே
இயற்கையின் இயக்கம் கடவுளானது!
இயற்கையின் இயக்கம் கடவுளானது!
கருவறைக் கல்லதும் தெய்வமாம் - இங்கே
கழிவறைப் பேணும் குப்பனோ குப்பையாம்!
கழிவறைப் பேணும் குப்பனோ குப்பையாம்!
நம்!ஆதி அழத்து புதுஅந்தம் புனைந்து
ஆளத் துடிக்கிறது ஆரியக் கூட்டம்!
ஆளத் துடிக்கிறது ஆரியக் கூட்டம்!
புரிதல் இல்லாத உறவுகளால் - அன்பெனும்
குழந்தை அனாதை ஆக்கப் படுகிறது!
குழந்தை அனாதை ஆக்கப் படுகிறது!
உணர்வோடு வாழ்பவன் மனிதன் ஆகிறான்!
உண்ர்வுகள் ஆள்பவன் மிருகம் ஆகிறான்!
உண்ர்வுகள் ஆள்பவன் மிருகம் ஆகிறான்!
வஞ்சப் புகழ்ச்சிப் பாடி! போர்மேகம்
கலைத்த ஔவை வளர்த்தது எம்தமிழ்!
கலைத்த ஔவை வளர்த்தது எம்தமிழ்!
தனிமனிதத் தேவைதான் ஓயாமல் சுழலும்
காலச் சக்கரத்தின் ஆதார அச்சாணி!
காலச் சக்கரத்தின் ஆதார அச்சாணி!
நேசம் மறந்த உறவின் பாசமது!
தழும்பில் துளிர்க்க முடியா கேசம்!
தழும்பில் துளிர்க்க முடியா கேசம்!
மனமடக்க மறுத்து! மடமையைத் துறந்துவிடு!
மனமாளத் துணிந்து! உலகத்தை வென்றுவிடு!
மனமாளத் துணிந்து! உலகத்தை வென்றுவிடு!
உன்போல் உறவென் உயிரில் கலந்தால்!
உலகம் எனக்கு உற்சாக உறைவிடம்!
மாறாத புன்னகை வேண்டுமா? மதியேற்கும்
மாறாத புன்னகை வேண்டுமா? மதியேற்கும்
மாற்றங்களைப் பழகிக் கொள்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக