கழனியிலே கதிர் அறுத்து!
களஞ்சியத்தில் நெல் குவித்து!
தரணியின் பசி ஆற்றிய உழவன்!
இறஞ்சி நிற்கிறான் இன்று!
இரக்கம் மறந்த அரசிடம்!
கண்ணுக்கு மை இட்டு!
கழுத்துக்கு சுறுக்கு மாட்டும்
தரங்கெட்ட அரசிடம் அவர்கள்
கெஞ்சி நிற்பதோ!
நன்றி மறந்த நமக்காக!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக