ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

புரியாத புதிர்

விடியாத இரவுகள்!
விலகாத கனவுகள்!
புரியாத உறவுகள்!
மடியாத உணர்வுகள்!
தெரியாத பாதைகள்!
முடியாத பயணங்கள்!
விடைதேடும் வினாக்களா? இல்லை!
வினாதேடிய விடைகளா? என்றறிய!

பிரியாத கடிதத்தில்!
தெளியாத சிந்தனைகளில்!
சிதறாத நினைவுகளில்!
உதவாத கற்பனைகளில்!
எழுதாத எழுத்துக்களில்!
அறியாத செய்தியைத் தேடுகிறேன்!

அதைத் தேடுகையில் ஏனோ!
உறக்கம் எந்தன் உறவை முறித்தது!

                             -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக