நீங்காத நினைவுகளின் நிழல்களோடு நான்!
நிஜங்களைத் தேடித் தவிக்கிறேன்!
நம்நட்பின் கரங்களில் தவழ்ந்த நொடிகளில்!
தனிமை எனக்குப் புதிதல்ல! ஆனால்!
இந்த வலிகள் எனக்குப் புதிது!
வளமான வருங்காலம்
உனக்கு வருமென்றால்!
சுகம்தான் எனக்கு இந்த வலிகூட!
நறுமணம் வீசிய நம்
நட்பின் நினைவுகளோடு!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக