ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

கூடிக் களித்திருக்க
கோடி பேர் வந்தாலும்!
 உள்ளன்பு கொண்டவர்
உனைப் போல் யாரிங்கே!

கரைகின்ற காலத்திலும்
வளர்கின்ற மதிபோல்!
கலையாத கோலத்தில்
மங்காத வண்ணமாய்
நினைவுகள் தந்தவளே!

நீயிருந்த காலம் வரை!
இருள் என்னை சூழ்ந்ததில்லை!
இன்றோ!
இருள்சூழ்ந்த உலகில்
உன்னையும் என்னையும் தேடுகிறேன்!
நீதந்த விளக்கின் துணையோடு!

ஆம்!
எனக்கு இன்றும் வழிகாட்டுவது
உன் நினைவுகள் மட்டுமே!

                                 — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக