ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

பிச்சை

இதயம் திறந்து உறவைத் தேடினேன்!
இமைகள் மூடி உறக்கம் தேடினேன்!
இரண்டுமே எனக்கு எட்டாக் கனியானது!

கற்பனைகள் இல்லாத கனவுகாண ஆசை!
எதிர்பார்ப்பு இல்லாத எதார்த்திற்கு ஆசை!

ஆனால்!

ஆசைகள் கூட என்னை 
அரவணைக்க வில்லை! காரணம்!
அன்பை அள்ளித் தந்துவிட்டு!
அனாதையாய் நிற்கும் ஏழை நான்!

இறக்க மனமின்றி பிச்சை
கேட்கிறேன்! உன் அன்பை!
                             - தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக