உன்வீட்டில் உலை கொதிக்க
தரணி வியந்த தைப் புரட்சியின்
உழவன் அங்கே சாலையில் உருளுகிறான்!
உன்வளம் காக்க போராடும்
உத்தமன் அங்கே சிறையில் உழலுகின்றான்!
மாணவச் செல்வங்கள் மருத்துவர்
கனவுகளைக் கண்ணீரில் கழுவுகிறார்கள்!
தன்னை மட்டுமல்ல உன்னையும்
நாம்பிறந்த மண்ணையும் காக்கத்தான்!
கதிரா மங்கலத்திலும் நெடுவாசலிலும்
மாதக்கணக்கில் மக்கள் போராடுகிறார்கள்!
வெள்ளைநூலில் காவிக் கொடி பறக்க
நம்உரிமைகளை காவு வாங்குகிறார்கள்!
சீறிவரும் காளை அடக்க
சீறிப்பாய்ந்த தமிழ் இனமே!
ஆர்ப்பரித்த அலைகடலும் அமைதியான
உன் ஆக்ரோஷம் எங்கே?
விண்ணொளியும் மின்னொளியும் மறைந்து போனபோதும்
பொன்னாளி வீசிய அலைபேசி எங்கே!
சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்று
சமர் செய்த வீரம் எங்கே?
புரட்சிக்கு புதுவதிகள் எழுதி! வெற்றிக்கனியை
எட்டிப்பறித்த உன் விவேகம் எங்கே?
தரணி வியந்த தைப் புரட்சியின்
வெற்றிச் சரித்திரத்தை!
நீ! மறந்துபோன வரலாற்றின் வரிசையில்
சேர்க்கத் துணிந்தாயோ தமிழா?!
உன்உரிமை காக்க எழுந்து வா! - புது
உலகம் படைப்போம் துணிந்து வா!
காலம் கரைகிறது தமிழனே!
தாமதம் செய்யாமல் விரைந்து வா!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக