ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உனக்காக

கண்ணீரில் மூழ்கிடும்
படகானது என்விழி!
கனவோடு கரைந்திடும்
காலம்தான் என்விதி!

என்மனம் குளிர
அன்பைப் பொழியும்
மேகமென உனை நினைத்து!
தென்றலை நான் தூதுவிட்டேன்!

வருடிய தென்றலில்
வண்ணங்கள் இல்லையென்றா
கலைந்து சென்றாய்?
என் கன்னங்களை குளிர வைத்து!

                            — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக