ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தூக்கியெறிவோம் போலி தேசத்தை

கடலில் வீசிய புயல்!
மண்ணில் இட்டது மழையை! எங்கள்!
நெஞ்சில் நிறைத்தது துயரை!

கைகட்டி வாய்ப்பொத்தி 
கல்லாய் நிற்கிறது
கையாலாகாத மாநில அரசு!

ஈழத்தில் நடத்திய
இனப்படு கொலையை!
இங்கேயும் நடத்திட
முனைந்து விட்டது மத்திய அரசு!

ஆம்!

விண்ணை முட்டும் ஊர்திகள்!
பிரம்மாண்டக் கப்பல்கள்!
எதுவும் வரவில்லை!
என் சகோதரனைத் காக்க!

மீத்தேன் தேட 
முண்டியடித்த அறிவியலும்!
எம்மீனவனைத் தேட 
முனைப்புக் காட்டவில்லை!

அணுவைப் பிளக்க 
அவசரம் காட்டிய அரசும்!
எம்மீனவன் எழுப்பும்
மரண ஓலத்தை மதிக்கவில்லை!

அன்னியச் செலவாணியை
அள்ளிக் கொடுத்த கரங்கள்!
ஆழியின் நடுவே
ஆதரவு கேட்டு தவிக்கின்றன!
நன்றிகெட்ட அரசிடம்!

விழித்துக் கொள் தமிழா!
சரியான முன்னறிவிப்பும் இல்லை!
நம்சகோதரனைத் தேட
முனைப்பும் இல்லை!

இன்னுமா புரியவில்லை
இது!
இனப்படு கொலை என்று!

இந்தப் போலி தேசத்திற்கு 
நம் பணம்தான் தேவை!
போலி தேச பக்தர்களுக்கு
நம் உயிர்தான் தேவை!

தூக்கியெறிய துணிவுகொள் தமிழா!
போலி தேசபக்தர்களை மட்டுமல்ல!
இந்தப் போலி தேசத்தையும்!

அப்பொழுதுதான் 
வாழ்வோம் நாம்!
வரலாற்றில் மட்டுமல்ல!
வருங் காலத்திலும்!

                                 — தல்லிதாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக