உழைப்புக்குக் கூலியை
பிச்சையாய் இட்ட பார்ப்பனியம்!
குழந்தைக்கு பாலூட்டும்
முலைக்கு வரிவிதித்த பார்ப்பனியம்!
அடிமை நாமென்று
அனுதினமும் கூவும் பார்ப்பனியம்!
அறிவுதரும் கல்வியை
நம்மிடம் பறித்த பார்ப்பனியம்!
வேதபாடம் கேட்டகாதில்
ஈயம் ஊற்றிய பார்ப்பனியம்!
மனித நேயம் கலக்காத
மனுதர்மம் காக்கும் பார்ப்பனியம்!
உனக்கு உதவுமென்று
உள்ளம் கொண்டாயோ மூடனே!
நமக்கு கல்விதந்த சட்டத்தின்
குரல்நெறிக்கும் சதி நடக்கிறது!
தரமென்றும் தகுதியென்றும் கூறி
நம்உரிமை பறிக்கசதி நடக்கிறது!
மீண்டும் உனக்கு அடிமை
விலங்கிட சதி நடக்கிறது!
சதிகாரர்களின் சட்டங்கள் இங்கே!
நம்மீது தொடுக்கும் போர்!
வீதிக்கு வராமலே உன்தோல்வியை
ஒப்புக்கொள்ள விருப்பமா! - அல்லது!
ஆயுதமில்லாப் புரட்சிப் போரிட்டு
வெற்றி வாகைசூட விருப்பமா?
ஒன்றை மட்டும் மறவாதே!
நீ!போராட மறுத்து விட்டால்
கல்வியென்பதே கனவாகிப் போகும்!
எனக்கல்ல! உன் சந்ததிகளுக்கு!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக