பழைய பூமியில் புதிய வாழ்க்கை!
பழைய கீதத்தில் புதிய கானம்!
பழைய பாறையில் புதிய சிற்பம்!
பழைய பாதையில் புதிய பயணம்! -என!
கடந்து போன பழமையில் நாம்
காக்க மறந்த புதுமைகள் பல!
ஆம்!
பகுத்தறிவு பள்ளியில் தேர்ச்சி பெற்ற
பழமை கூட என்றும் புதுமையே!
தேர்ச்சிப் பெற தவறி விட்டால்
புதுமையின் அர்த்தம் கூட மடமையே!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக