மரங்களில் தூண்கள் அமைத்து!
இலைகளால் கூரை வேய்ந்து!
இயற்கை அமைத்த மாளிகை!
வகை வகையாய் மரங்கள்!
உயிரைப் பறிக்கும் விலங்குகள்!
மருவத்திற்கு அற்புத மூலிகைகள்!
எண்ணில் அடங்கா பூச்சிகள்!
அவற்றின் பேச்சுகளின் ஒலிக்கலவை!
சருகும் சகதியுமாய் வழியில்லா பாதை!
சற்று அண்ணாந்து பார்த்தால்!
குழந்தை போல் கண்ணாமூச்சி
ஆடும் ஆகாயச் சூரியன்!
இலைகளின் வாசம் இதமாய் தீண்ட!
மரங்களின் வாசம் மனதை நிறைக்கும்!
வந்தவழி மறந்து நின்றால்
கற்கால வாழ்வைக் காட்டும்!
அந்த!
அழகிய வனம்! அதைவிட்டுப் பிரிய
என்றுமே விரும்பாது மனம்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக