உலகில் கடவுளைப் படைக்க
மனிதன் மறந்(றுத்)திருந்தால்!
எல்லை வேலிகள்
இல்லாமல் போயிருக்கும்!
ஆயுதக் கிடங்குகளில்
அன்பு மலர்கள் பூத்திருக்கும்!
சமத்துவம் வாழ்வின்
அங்கமாய் மாறியிருக்கும்!
மொத்தத்தில்!
மதத்திற்குப் பதிலாக
மனிதம் வளர்ந்திருக்கும்!
— தல்லிதாசன்
நேரம் : ௨௰௨.௦௦; தை24, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக