உலகில் சிறந்த அழகு எதுவென்று!
காற்றிடம் கேட்டேன்! அது!
உன் மூச்சுக் காற்றைக் காட்டியது!
சோலையிடம் கேட்டேன்! அது!
உன் பார்வைபட்ட மலர்களைக் காட்டியது
அலைகளிடம் கேட்டேன்! அது!
உன் பாதம்பட்ட மண்ணைக் காட்டியது!
கண்களிடம் கேட்டேன்! அது!
உன் இதழ்களின் புன்னகையைக் காட்டியது!
ஆனால்! கண்ணாடி மட்டும்!
என் இதயத்தைக் காட்டியது!
ஆம்! அது துடிப்பது
உன் நினைவில் அல்லவா!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக