காலைப் பனியாய்
உருகும் உயிரில்!
உன்னை ஊற்றினாய்!
தடைகள் கடந்து
உலகை ரசிக்க!
என்னை மாற்றினாய்!
பொய்யாய் இதழ் பூத்தாய்!
புதிதாய் நான் பிறந்தேன்!
காற்றின் கரம் பிடித்தாய்!
மலரின் மணம் உணர்ந்தேன்!
ஒரே முறை!
மூச்சுக் காற்றை!
உரசிச் செல்லடி!
— தல்லிதாசன் மறுபிறப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக