செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

மறுபிறப்பு

காலைப் பனியாய்
உருகும் உயிரில்!
உன்னை ஊற்றினாய்!
தடைகள் கடந்து
உலகை ரசிக்க!
என்னை மாற்றினாய்!

பொய்யாய் இதழ் பூத்தாய்!
புதிதாய் நான் பிறந்தேன்!
காற்றின் கரம் பிடித்தாய்!
மலரின் மணம் உணர்ந்தேன்!

ஒரே முறை!
மூச்சுக் காற்றை!
உரசிச் செல்லடி!

                                 — தல்லிதாசன்  மறுபிறப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக