நெற்றி முடியை கோதிவிட்டு! அதில்
முத்தமொன்று தானிட்டு!
அடங்காத ஆசை வெள்ளத்தின்
அகரம் தொடங்கி!
இமைகளில் இதழ் பதித்து!
இதழ்களில் விரல் பதித்து!
கன்னங்களில் உதட்டு ரேகை பதித்து!
காது மடலோரம்!
நாவால் கோலமிட்டு!
தொண்டைக் குழியின் பாதைக்கு!
நாவால் ஒத்தனமிட்டு!
இன்ப ஊற்றெடுக்கும்
இரண்டு கிண்ணங்களில்!
குறையாத தேனை!
குறைவின்றி பருகி!
இளமைப் பசியாற்றி!
இடையென்னும் தடைதாண்ட
தடைபோடும் குழியின் மேல்
நாவடக்க எண்ணித்தான்!
நானும் உன்னைக் கேட்டேன்!
ஆனால்!
பின்னழகில் பேச்சடங்க!
முன்னழகில் மூச்சடங்க!
எங்குதான் நான் தொடங்க!
எங்குதான் நான் மடங்க!
புரியாமல் புலம்புகிறேன்! போதை
தெளியாமல் திணறுகிறேன்!
—தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக