ஒத்தப் புள்ளப் பெத்து! அதுவும்
பொட்டப் புள்ளப் பெத்து!
கஞ்சிக்கே வழியில்லாத
குடியானவன் குடிசையில!
ராணியாய் வளத்தேஞ் சாமி! எம்மவள!
இல்ல இல்ல!
எங்க ஊரு மருத்துவச்சிய!
பத்துமைல் தூரம்தான் பள்ளிக்கூடம்!
அந்த அரசாங்க வண்டியில!
பட்டாம்பூச்சியா பறந்து போவா!
பாடம் படிக்க!
மருத்துவச்சி ஆகணும்னு!
மனசெல்லாம் ஆச வச்சி!
இராப்பகலு பாராம படிச்சாளே!
பன்னிரண்டாப்பு பரீட்சை முடிவு வந்தப்போ!
இவளப் பாராட்ட!
பத்திரிக்ககாரக எல்லாம்!
எம்மவளத் தேடி வருகயில!
பெத்தவன் நான் பூரிச்சி
நின்னேஞ் சாமி!
பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடச்சி!
எம்மவ மருத்துவச்சி ஆயிட்டான்னு!
கனவுல மொதந்தேஞ் சாமி!
ஆனா!
சட்டுனு ஒரு சட்டம்போட்டு!
நீட்டுனு ஒரு பரீட்சை வச்சி!
பள்ளிக் கூடத்துல
சொல்லாத பாடத்துல
கேள்வி கேட்டு!
எம்மவளோட கனவுக்கு குழி பறிச்சானுங்களே!
பிஞ்சுல இருந்தே!
நெஞ்சுல சுமந்த லட்சியக் கனவ!
பறிகொடுத்த சோகத்துல
சோறு தண்ணி உண்ணாம
சோர்ந்தே இருந்த புள்ள!
தூக்குக் கயித்த தொட்டு!
இன்னைக்கு பாடையில கிடக்காளே!
இந்த ஏழவூட்டு எழவுக்கு!
எங்க போயி நீதி கேப்பேன்!
சட்டம் போட்டு கொலை செஞ்ச
இந்த அரசாங்கத்த தண்டிக்க!
எங்க போயி சட்டம் தேடுவேன்!
சட்ட நூலிலா?
பட்ட நூலிலா? இல்லை
பட்டை நூலிலா?
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக