காதலின் வேதனை!
அதன் காரணம் தேடினேன்!
காற்றில் காண்கிறேன்!
அந்தக் காயத்தின் வேரினை!
நடனம் பழகும்
அவள் கூந்தலில்
பிறந்திடும் பூங்காற்றா!
அவள் வீசிடும் பார்வையில்
புறப்படும் புயலா?
அவள் பேசிடும் மொழியில்!
வீசிடும் தென்றலா?
எந்தக் காற்றை ஏவிவிட்டு
என்னைக் கொல்ல எத்தனித்தாள்!
என்று குழம்பி நிற்கையில்!
மொட்டவிழ்த்து பூத்து நின்ற
புதுமுல்லையின் வாசம்! என்!
நாசிதொட்டு சொன்னது!
அது!
என் இளமைச் சாரலை!
தழுவி வரும் வாடைக் காற்றென்று!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக