செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

தனிமை தொலைத்தேன்

பனிமழையில் நனையத் துடித்தேன்! அது!
உன்நினைவை அள்ளித் தெளிக்கிறது!

வெள்ளைப் பூக்கள் சிந்திய சாலையை! உன்
எண்ணப் பூக்களின் வாசத்தில் கடக்கிறேன்!

உன்நிழலின் பிம்பம் தீண்டா பொழுதிலும்
உன்நினைவின் நிஜங்கள் சீண்டி வாழ்வதால்
நகரும் நாட்கள் நரகமாய்த் தெரியவில்லை!
தனிமையின் அர்த்தம் கனவிலும் புரியவில்லை!

                         — தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக