செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

அழகின் தரிசனம்

தென்றலின் முத்தத்தில்
நாணம்விட்டு உடைஅவிழ்த்து
பூத்து நிற்கும் மொட்டுக்கள்!

பச்சைப் புல்வெளியில்
படர்ந்த பனித்துளியில்!
தன்முகம் பார்க்க
எட்டிப் பார்க்கும் இளஞ்சூரியன்!

கருங்குயில்களின் கான மழை!
சிட்டுக் குருவிகளின்
கீச்சுக் குரல்கள்! என்று!

கண்விழிக்கும் காலைப்
பொழுதில் அத்தனை அழகு
இந்த உலகில் கொட்டிக் கிடக்கிறது!

ஆனால்!
அத்தனை அழகும் சற்று
எட்டிதான் நிற்கிறது!
ஆம்!
உறக்கம் கலைந்து
விழிகள் திறந்து!
அரைத் தூக்கத்தில்!
கைகள் நீட்டி!
என்னவள் சோம்பல் முறிக்கும் அழகுக்கு!
இணையாக முடியாத வருத்தத்தில்!
சற்று எட்டிதான் நிற்கின்றன!

அந்த அழகைக் காண தவிக்கும்
உலகே! சற்று பொறுமைகொள்!
அவள் நித்திரை கலைக்கும் வரை!
ஆம்!
என்னவள் உறங்குகிறாள்!
என் நினைவுகளோடு!

                                — தல்லிதாசன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக