காலை மலரின் வர்ணத்தை
விழிகள் மறந்தன!
அதன் மென்மையும்!
விரல்களில் நிலைக்கவில்லை!
ஆனாலும்!
அதன் மௌனம் மட்டும்
இதயத்தை ஏனோ
கீறிக்கொண்டே இருக்கிறது!
காரணம் கேட்டேன்!
காதல்! என்றது தென்றல்!
என் காதலுக்கு தூது சொல்ல
தென்றலை அழைத்தேன்!
ஆனால்! அது!
தன்காதலை உன்னிடம் சொல்ல
சோலை மலர்களின் வாசத்தோடு
உன் வாசலுக்கு வந்துவிட்டது!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக