செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

காதல்

ஆதி மனிதன்! தன்
ஆசைக் காதலை
எப்படி சொல்லி யிருப்பான்!

இதழ்களின் மொழி அறியாததால்!
இமைகளின் மொழியில் காதலைச் சொன்னானா?

காற்றோடு கலவி செய்யும்
இலைகளின் இன்னிசையில் காதலைச் சொன்னானா!

இல்லை!

ஒலியும் மொழியும் இன்றி!
இதழோடு இதழ்கோர்த்து காதலைச் சொன்னானா!

எந்த வழியில் காதலைச் சொல்லி!
இப்படி நிறைத்தான் இந்த உலகை?

தீராத குழப்பம் தீர!


சிந்தனைக் கேணியில்
வெந்தழல் ஊற்றி! சிந்திக்கிறேன்!

எந்த வழியில் காதலைச் சொல்லி
உன் இதயத்தில் என்னை 
நிறைக்கலாம் என்று!

                                   — செல்வராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக