மலர்வாடிய சோலையில் வான்மழை நீயல்லவா!
விழிதேடிய விடியலின் முகவரி நீயல்லவா!
உயிர் தேடி களைத்தேனே!
உனைக் கூடி பிழைத்தேனே! கானலாய்!
வெண்மேகமே வெண்மேகமே
வெட்கம் விட்டு வந்தால் என்ன?
கண்ணாளனே கண்ணாளனே
கண்ணால் காதல் சொன்னால் என்ன?
இடைவெளி நம்மில் இருக்குதா?
என்னில் காண்கிறேன் உனையே!
விலகிட நெஞ்சம் நினைக்குமா?
உயிர் தேடுதே உனையே!
ஒருமுறை இதழ்கள் கோர்க்கவே! என்
இதயத்தில் தினம்தினம் போர்க்களம்!
— தல்லிதாசன்
நேரம் : காலை ௰.௦, மாசி 7, 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக