உயிர் விட்டு உடல் என்றும் வாழ்வதில்லை!
என்உயிர் என்றும் நீயென்று தெரியாதா?
உயிர் விட்டு உடல் என்றும் வாழ்வதில்லை!
என்உயிர் என்றும் நீயென்று தெரியாதா?
உன் மடியினில் எந்தன் தலை சாய்த்துஎன்
மரணத்தை ஏற்பேன் தெரியாதா?
தென்றலில் இளந்தெ ன்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள்
உன்கண்களில் நான் காண்கிறேன்!
உனக்கென வாழும் நொடிகளில் தான்!
என் இதயமும் துடிக்க அனுமதிப்பேன்!
ஒருநொடி உனை நான் பிரிந்தாலும்!
இந்த உலகத்தின் உறவினை இழந்திடுவேன்!
இமை நீங்கிய பின் விழி உறங்கிடுமோ?
என்இமையே உனக்கேன் புரியவில்லை??
தென்றலில் இளந்தென்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள்
உன்கண்களில் நான் காண்கிறேன்!
நீயுதிர்க்கும் முத்துப் பேச்சில்!
தேன்சிதறும் வண்ணக் கூட்டில்!
என்உலக மலர்கள் தினம் பூத்திடுமே!
அந்த மலரின் மணத்தில் உயிர் ஊறிடுமே!
கரை ஒதுங்கிய பின் கயல் வாழ்ந்திடுமோ!?
என்கடலே எனைநீ ஒதுக்காதே!!
தென்றலில் இளந்தென்றலில்
உன்சுவாசத்தால் நான் வாழ்கிறேன்!
காட்சிகள் என்காட்சிகள்
உன்கண்களில் நான் காண்கிறேன்!
-- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக