பேருந்தில் செல்லும் உன்னை
காண முடியாத ஏக்கத்தில்
அங்குமிங்கும் அலைகிறான் கதிரவன்!
கதிரவன் வெப்பம்
உன்னை வாட்டுமே என்று!
சன்னல் ஓரத்தில்
நகரும் மரங்களின்
கீற்றுத் தென்றலாய் என்
மூச்சுக் காற்றை அனுப்புகிறேன்!
தென்றலோடு கலந்த என்அன்பு
உன்னைத் தீண்டும்
ஒவ்வொரு நொடியும்!
கதிரவன் வெப்பம் மட்டுமல்ல!
மேகம் சிந்தும் மழைகூட
உன்னை விட்டு விலகி நிற்கும்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக