உன் அன்பில் உருகிடுவேனா?
உதட்டோரம் உறைந்திடுவேனா?
மனதோடு மழைச் சாரலும்வீச!
உன் மடிமீது உறங்கிடுவேனா?
கதை கூற மறுக்கும் இதழ்கள்!
அதைப் பேச துடிக்கும் விழிகள்!
என் விழியும் இதழும் உன் சொந்தம்!
என் துயிலும் கவியும் உன் தஞ்சம்!
விடை தேடும் கேள்விகள் என்னில்!
திரை போடும் நூலகம் உன்னில்!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக