பொறுத்தது போதும் தமிழா!
நீ பொறுமை விடு!
நாம் அடிமைகள் இல்லை என்றே!
முழக்கம் இடு!
உறவுகள் கண்ணீர்த் துடைக்க!
நீ கரத்தை எடு!
உரிமைப் போரை வென்று! புது
சிகரம் தொடு!
அறங்கள் சூழ்ந்த! அழகிய நாட்டை!
அண்டிய மிருகக் கூட்டம்!
நம்மனதின் குகையில்! மதத்தைப் பூட்டி!
போடுது இங்கே ஆட்டம்!
சிலையின் காதில்! சொல்லிவிட்டால்! உன்
வீட்டில் உலைதான் கொதித்திடுமா?
பிறையைப் பார்த்து தொழுதுவிட்டால்! உன்
வாழ்வின் பிழைகள் மறைந்திடுமா?
மனிதா! மனிதா! விழித்து விடு!
மதத்தைத் தூக்கி எறிந்து விடு!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக