சனி, 5 செப்டம்பர், 2015

என்காதலை சொல்ல எத்தனித்தேன்

கற்பனைகள் ஏதுமின்றி
கவிநடைகள் ஏதுமின்றி
இயல்பாய் சொல்ல
எத்தனித்தேன் என்காதலை!

வாரத்தைகள் ஏதுமின்றி
இதழ்கள் மௌனமாகின!
கனவுகள் சுமக்கும் விழிகளோ
கண்ணீரை விடையாக்கின!

ஆம்!

வார்த்தைகளில் அடங்காத என்காதலை
காவியமாய்ப் படைத்திட
பேனா மையாகும் ஆவலில்
வந்த ஆனந்தக் கண்ணீர்!

                    -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக