சனி, 5 செப்டம்பர், 2015

உம்மருகே நானிருக்கையில்


துடிக்க மறந்தது இதயம்
உம்பேச்சை ரசிக்கும் இனிமையில்!

உம்மை ரசித்த விழிகளுக்கு
மற்ற காட்சிகள் யாவும்
வௌ்ளைக் காகித மாகின!

உம்மோடு பேசத்துடிக்கும் ஆவலில்
ஆனந்தக் கூத்தாடின இதழ்கள்!

உம்இதழ் வடிக்கும் வார்த்தைகளை
வரமாய் எண்ணி மகிழ்ந்தன செவிகள்!

மௌனமாய் தவமிருந்தன கரங்கள்
உம்கரம் பற்றும் வரம்வேண்டி!

                  -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக