சனி, 5 செப்டம்பர், 2015

தயாராய் இரு

சாதிகளை வேரறுக்க வந்தவன் நீ!
ஏற்றத்தாழ்வுகளை எட்டிஉதைக்க வந்தவன் நீ!
கல்லாமையை களையெடுக்க வந்தவன் நீ!
இல்லாமையை இல்லாமலாக்க வந்தவன் நீ!
அரசியலை அழகாக்க வந்தவன் நீ!
உரிமைக்கு குரல்கொடுக்க வந்தவன் நீ!
மூடத்தனத்திற்கு முடிவுகட்ட வந்தவன் நீ!
உண்மையை உணர்த்த வந்தவன் நீ!

இவை உன்கடமைகள் அல்ல!
நீபிறந்த மண்ணின் பெருமை காக்க
உணர வேண்டிய முதன் மொழிகள்!

உணர வேண்டிய!
உணர்த்த வேண்டிய!
உண்மைகள் ஏராளம் உண்டு!

பொறுத்தது போதும் தோழனே!
பொங்கி வா!
யுத்தம் ஒன்று காத்திருக்கிறது!

ஆம்!
 
மெய்யுக்கும் பொய்யுக்குமான யுத்தம்!
வீணர்களை விலக்கி வைக்கும் யுத்தம்!
வளர்ச்சியை முன்னெடுக்கும் யுத்தம்!

யுத்தத்தின் முடிவில்
துளிர்க்கும் ஒருபுது தேசம்!
நமக்கென நம்தேசம்!
தமிழ்தேசம்!

                   -- தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக